search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார்.
    • சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    அதன்படி, இன்று மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிறகு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

    இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.

    சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    மோடி.. மோடி.. என உற்சாக குரல் எழுப்பி, பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களவை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.

    பிரதமர் மோடியுடன், வாகனத்தில் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உடன் உள்ளனர்.

    வாகனத்தில் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.

    ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
    • கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.

    கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.
    • கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.

    மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

    ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

    இதையடுத்து, அனுமதி மறுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

    பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மாலை தீர்ப்பளித்தார்.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
    • தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

    கோவை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளல் பங்கேற்பதற்காக இன்று இரவு கோவை வருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை காலை கோவை கொடிசியாவில் நடைபெறும் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் பங்கேற்று, ஆணைகளை வழங்குகிறார்.

    நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு, நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து அதே வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுததுறை சார்பில கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர், தமிழ்நாடு திறன் மேம்பாடுக் கழக மேலாண்மை இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

    • ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம்.
    • பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும்.

    விரதம் என்பது உணவின் மீதான பற்றை தற்காலிகமாக கைவிடுதல். காரணம் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தின் மிக முக்கிய அங்கமாக இருப்பது உணவு. நம் புராணங்களில், இலக்கியங்களில் பல்வேறு விதமான விரதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    சஷ்டி விரதம், நவராத்திரி விரதம், மஹா சிவராத்திரி விரதம், ஏகாதசி விரதம் என ஏராளமான விரத முறைகள் உண்டு. ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு குணநலன்களும், பலன்களும் உண்டு. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நோக்கம் என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீகம், ஆரோக்கியம் என எந்த நோக்கத்தோடு ஒருவர் விரதம் அனுசரித்தாலும், இறுதியில் அது அந்த குறிப்பிட்ட நபரின் நல்வாழ்வை மேம்படுத்துவது தான் விரதத்தின் சிறப்பு.

    அந்த வகையில் ஆன்மீக பாதையில் விரதம் இருப்பதால், தெய்வீகத்தின் தீவிரத்தை சற்று நெருக்கமாக உணர முடியும். ஆன்மீக ரீதியான சாதனாக்கள் செய்கிற போது அதற்கு ஒத்துழைக்கும் விதமாக மனமும், உடலும் சமநிலை அடைகிறது. உணவு உட்கொள்ளும் முறை குறித்து சத்குரு அவர்கள் கூறும் போது கூட, யோக முறையில் ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்குமான இடைவெளி குறைந்தது 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்கிறார்.

    மேலும் அவர் "வயிறு காலியாக இருக்கும் போது உணவை ஜீரணித்து வெளியேற்றும் மண்டலம் சிறப்பாக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி ஒருவர் ஒருபோதும் கட்டாயமாக, இந்த விரதத்தை மேற்கொள்ளாமல் இருப்பது அவசியம். உடலின் இயற்கையான சுழற்சியோடு ஒன்றி இந்த விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை தான் நாம் மண்டலம் என்று அழைக்கிறோம். ஒரு செயல்முறையை 40 இல் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்கிற போது நம் உடல் குறிப்பிட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

    இந்த சுழற்சி தொடரும் போது உடலுக்கு எப்போது உணவு தேவை என்கிற விழிப்புணர்வு கிடைக்கும். அதற்கு உணவு தேவைப்படாத போது நீங்கள் வெகு இயல்பாக விரதத்தை மேற்கொள்ள முடியும். அதோடு வயிறு காலியாக இருப்பதற்கும் பசியோடு இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும். அதுவே உங்கள் வயிறு காலியாக இருந்தால் உங்கள் உடலும் மனமும் அதன் உட்சபட்ச திறனில் வேலை செய்யும்" என்கிறார்.

    இதனால் தான் சிவாங்கா சாதனாவில் இருக்கும் சாதகர்கள், இரு வேளை உணவு மட்டுமே உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் வேளை உணவு நண்பகல் 12 மணிக்கு மேல் உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது.

    அதன்படி விரதமிருந்து சிவாங்கா சாதனா மேற்கொள்ளும் சாதகர்கள் பலர், தற்போது ஆதியோகி ரத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு ஏராளமான தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதியோகி ரத யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் நான்கு திசைகளிலும் வலம் வந்தவாறு இருக்கிறது. 35,000 கி.மீக்கும் மேற்பட்ட தூரத்தை கடந்து, மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று இந்த ரதங்கள் கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.

    • ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
    • 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆனைமலை பகுதியில் உள்ள 6 இடங்களில் தொடர்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

    இதன்படி வால்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீநிதி மற்றும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் கட்டிடத் தொழிலாளி போல் வலம் வந்துள்ளார். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபகாலமாக கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    குற்றவாளி ராமச்சந்திரனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை கோட்டூர் போலீஸ் சரகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பகுதிக்கு பரிச்சயம் இல்லாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோட்டூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளி பற்றி தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த கொத்தனார் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தோம். பின்னர் அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோட்டூரில் நடைபெற்ற 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது மதுரை மாநகர், மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்து கோட்டூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

    ராமச்சந்திரனை கைது செய்யும் விஷயத்தில் எங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருந்தது. எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால், நாங்கள் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம், மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் வீடியோக்களில் விளம்பரம் பார்த்தால் தினமும் சராசரியாக ரூ.5 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஒண்டிப்புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டடோர், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ஒருசிலர் சமூகவ லைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் உள்ளார். எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டுமென கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் சக்தி ஆனந்தன் மீது போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவுசெய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த சிலரை போலீசார் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இன்றும் பலர் வ.உ.சி பூங்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை தனியார் நிறுவனத்தின் இணையதள செயலியை மாநகர போலீசார் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த செயலி மீண்டும் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் அந்த இணைய செயலி மூலம் வாடிக்கையாளர் மேலும் சேர முடியாத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடியுள்ளார்.
    • புகார் பேரில் வடவள்ளி போலீஸார் ரேவதியை கைது செய்துள்ளனர்..

    கோவை, 

    கோவை வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மலர்(48). இவர் சம்பவத்தன்று கோவை கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீரகேரளம் செல்லும் பஸ்சில் சென்றார். வீட்டிற்கு சென்று தனது பையை எடுத்து பார்த்தார். அப்போது, தங்க செயின் மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகைைய திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய கடலூர் நெல்லி குப்பத்தை சேர்ந்த ரேவதி(28) என்பவரை கைது ெசய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 4 பவுன் செயினை மீட்டனர்.

    • தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
    • உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை. 

    ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-

    எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

    அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தியதால் வாக்குவாதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை. 

    கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து காவலராக இருப்பவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, அங்கு கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த இளநீர் கடை நடத்தி வரும் மார்லின்(35), என்பவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வேகமாக வந்தார்.

    இதை பார்த்த போலீஸ்காரர் மதுசூதனன், மார்லின் வாகனத்தை நிறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மார்லின், போக்குவரத்து போலீஸ்காரரை தாக்க முயன்றார்.

    இதுகுறித்து மதுசூதனன் கோவை ஆர்எஸ். புரம் போலீசில் புகார் செய்தார்.பு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மண்டல செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • நெல்லையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு கோவையிலிருந்து 50 வாகனத்தில் செல்ல தீர்மானம்

    கோவை, 

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டல செயலாளர் உபை துர் ரஹ்மான் தலைமையில் உக்கடம் சாக்கு வியாபா ரிகள் சங்க கட்டிடத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், மத்திய மாவட்ட பொறு ப்பாளர் ராமகிருஷ்ணன், பாராளுமன்ற துணை பொறுப்பாளர் பால்ராஜ், தொகுதி செயலாளர்கள் கவுண்டம்பாளையம் தொகுதி செயலாளர் சரத் சக்தி, தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் அசிரியா, வால்பாறை தொகுதி செயலாளர் மதிவாணன், திருப்பூர் தெற்கு தொகுதி செயலாளர் செல்வராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் கண்மணி, குனியமுத்தூர் பகுதி செயலாளர் சுரேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், குனியமுத்தூர் பகுதி இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் தம்பு, வால்பாறை இளைஞர் அணி செயலாளர் ஆறு முகம், குனியமுத்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி பிரமாண்ட கூட்டத்துக்கு கொங்கு மண்டலத்தின் சார்பாக 50 வாகனத்தில் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    ×