search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi Rally"

    • பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.
    • கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.

    மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

    ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

    இதையடுத்து, அனுமதி மறுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

    பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மாலை தீர்ப்பளித்தார்.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 மாணவர்கள் காயமடைந்தனர்.#HPAccident #BusOverturned
    ஷிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தரம்சாலாவில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும் மாணவர்கள் ஒரு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். 

    இந்த பஸ், கங்ரா மாவட்டம் ஜவாலி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

    இந்த விபத்தில் 35 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HPAccident #BusOverturned
    ×