search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரதமிருப்பதால் நிகழும் வியக்கத்தக்க நன்மைகள்!
    X

    விரதமிருப்பதால் நிகழும் வியக்கத்தக்க நன்மைகள்!

    • ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம்.
    • பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும்.

    விரதம் என்பது உணவின் மீதான பற்றை தற்காலிகமாக கைவிடுதல். காரணம் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தின் மிக முக்கிய அங்கமாக இருப்பது உணவு. நம் புராணங்களில், இலக்கியங்களில் பல்வேறு விதமான விரதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    சஷ்டி விரதம், நவராத்திரி விரதம், மஹா சிவராத்திரி விரதம், ஏகாதசி விரதம் என ஏராளமான விரத முறைகள் உண்டு. ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு குணநலன்களும், பலன்களும் உண்டு. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் நோக்கம் என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் ஒருவர் விரதம் மேற்கொள்வதன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீகம், ஆரோக்கியம் என எந்த நோக்கத்தோடு ஒருவர் விரதம் அனுசரித்தாலும், இறுதியில் அது அந்த குறிப்பிட்ட நபரின் நல்வாழ்வை மேம்படுத்துவது தான் விரதத்தின் சிறப்பு.

    அந்த வகையில் ஆன்மீக பாதையில் விரதம் இருப்பதால், தெய்வீகத்தின் தீவிரத்தை சற்று நெருக்கமாக உணர முடியும். ஆன்மீக ரீதியான சாதனாக்கள் செய்கிற போது அதற்கு ஒத்துழைக்கும் விதமாக மனமும், உடலும் சமநிலை அடைகிறது. உணவு உட்கொள்ளும் முறை குறித்து சத்குரு அவர்கள் கூறும் போது கூட, யோக முறையில் ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்குமான இடைவெளி குறைந்தது 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்கிறார்.

    மேலும் அவர் "வயிறு காலியாக இருக்கும் போது உணவை ஜீரணித்து வெளியேற்றும் மண்டலம் சிறப்பாக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி ஒருவர் ஒருபோதும் கட்டாயமாக, இந்த விரதத்தை மேற்கொள்ளாமல் இருப்பது அவசியம். உடலின் இயற்கையான சுழற்சியோடு ஒன்றி இந்த விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை தான் நாம் மண்டலம் என்று அழைக்கிறோம். ஒரு செயல்முறையை 40 இல் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து செய்கிற போது நம் உடல் குறிப்பிட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

    இந்த சுழற்சி தொடரும் போது உடலுக்கு எப்போது உணவு தேவை என்கிற விழிப்புணர்வு கிடைக்கும். அதற்கு உணவு தேவைப்படாத போது நீங்கள் வெகு இயல்பாக விரதத்தை மேற்கொள்ள முடியும். அதோடு வயிறு காலியாக இருப்பதற்கும் பசியோடு இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பசியோடு விரதம் இருந்தால் உங்கள் ஆற்றல் பலவீனமடையும். அதுவே உங்கள் வயிறு காலியாக இருந்தால் உங்கள் உடலும் மனமும் அதன் உட்சபட்ச திறனில் வேலை செய்யும்" என்கிறார்.

    இதனால் தான் சிவாங்கா சாதனாவில் இருக்கும் சாதகர்கள், இரு வேளை உணவு மட்டுமே உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் வேளை உணவு நண்பகல் 12 மணிக்கு மேல் உண்ண அறிவுருத்தப்பட்டுள்ளது.

    அதன்படி விரதமிருந்து சிவாங்கா சாதனா மேற்கொள்ளும் சாதகர்கள் பலர், தற்போது ஆதியோகி ரத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு ஏராளமான தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதியோகி ரத யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு 4 ஆதியோகி ரதங்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் நான்கு திசைகளிலும் வலம் வந்தவாறு இருக்கிறது. 35,000 கி.மீக்கும் மேற்பட்ட தூரத்தை கடந்து, மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று இந்த ரதங்கள் கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.

    Next Story
    ×