search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி விழா"

    • கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாக பூஜையை முன்னிட்டு அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார்.

    அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல் அங்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் தங்கி விரதம் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 35 ஆயிரம் பக்தர்கள் தங்கலாம்.

    தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் ஆகி, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவில் 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி அங்கி ருந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூபம் தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்நாளான 20-ந்தேதி (திங்கட்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    திருவிழா 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழா வெள்ளிக்கிழமை 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முரு கன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனையும், தினசரி ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.
    • திருக்கல்யாண நிகழ்ச்சி 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9. 45 மணி முதல் 10. 15 மணி வரை நடைபெற உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ் பெற்ற முத்துக்குமாரசாமி மலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள், விழாவின் தொடக்க நாள் அன்று காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை 8.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனையும், தினசரி ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து 18 -ந்தேதி காலை 8.30 மணிக்கு மண்டபார்ச்சனையும், 96 வாசனை திரவியங்கள் கொண்டு சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது. மேலும் அன்று காலை கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9. 45 மணி முதல் 10. 15 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
    • காகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் ஆல யத்தின் 54-வது ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி திங்கட்கிழமை தொடங்கி 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வருகிற 13-ந்தேதி திங்கட் கிழமை காலை 5 மணிக்கு புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மகாகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு பால முருகனாக உருகாப்பு நடை பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆறு படை மகிமை என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு நடை பெறுகிறது. இரவு 8 மணிக்கு ஓவியப்போட்டியும், 8.30 மணிக்கு மாபெரும் வண்ணக் கோலப்போட்டி நடைபெறு கிறது. இதில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசாக 3001, 2-ம் பரிசாக 2001, 3-ம் பரிசாக 1001 வழங்கப்படுகிறது.

    14-ந்தேதி செவ்வாய்க் கிழமை 2-ம் நாள் உழவர் விழாவாக நடைபெறு கிறது. அன்று இரவு 7 மணிக்கு திருமாங்கல்ய பூஜையும், 8 மணிக்கு மேஜிக் ஷோ நிகழ்ச்சியும், இசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. 15-ந்தேதி புதன் கிழமை பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு 7 மணிக்கு சொற்பொழிவும், 8 மணிக்கு மாபெரும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. 16-ந்தேதி வியாழக்கிழ மை காலை 6.30 மணி முதல் பூஜைகளும் ஆறுமுகனாக உரு காப்பும் நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு பாரதப்போருக்கு யார் காரணம் என்று தலைப்பில் விசாரணை மன்றம் நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.

    17-ந்தேதி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொ டர்ந்து சுவாமி போர்க் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருவிளக்கு பூஜையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி என். விக்டோரியா கவுரி முதல் திருவிளக்கு தீபம் ஏற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மகளிர் மாநாடும் நடைபெறுகிறது.

    18-ம் தேதி சனிக்கிழமை காலை 6-ம் நாள் கந்த சஷ்டி விழா, காலை 6.30 மணிக்கு உதய கால பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. 11 மணிக்கு கும்பாபி ஷேகமும், பகல் 12 மணிக்கு பெருவிளை அருள்மிகு சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியி டமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும்

    1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹா ரத்திற்குப் புறப் படுதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. அப்போது வண்ண கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 8.30 மணிக்கு தொழிலதி பர் கேட்சன் தலைமையில் போட்டி சிலம்பம் நிகழ்ச்சி ஆகியவையும் நடக்

    கிறது. 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 7-ம் நாள் திருக்கல்யாண விழாவாக நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு அன்னாபிஷே கமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும், 1 மணிக்கு அன்னதா னமும் வழங்கப் படுகிறது. அன்று மணக் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை புஷ்பாபிஷேக மும் அதனை தொடர்ந்து பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராதனையும் நடக்கி றது.

    இரவு 8.45 மணிக்கு மணிமகுடம் என்ற சமூக நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் முருக னுக்கு அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை, இன்னிசை கச்சேரி, சஷ்டி கவசம் வாசித்தல் ஆகி யவை நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் முன்பு பந்தல் போடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா ஏற்பாடுகளை கௌரவத் தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோ சகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் இராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கௌரவத் தலைவர் அருள் குமரன், உபத்தலைவர் இராதாகிருஷ்ணன் இணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல்முருகன், மண்டப பொறுப்பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல் சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
    • தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார்.

    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

    இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

    தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

    அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

    நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

    தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

    அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

    'சஷ்டியை நோக்க சரவண பவனார்

    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'

    என்று தொடங்கும் கவசம்.

    இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

    முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.

    இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

    இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

    பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று கந்த சஷ்டி விழா தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சூரசம்காரம் நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வந்தார்.

    சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு வீரபாகு தேவருடன் எழுந்தருளினார். அங்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெ ருமான்-தெய்வானை மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    தேரோட்டம்

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். கோவில் வாசல் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய சட்டத் தேரில் எழுந்தருளினர்.

    தேரை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவல பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து இன்று மாலையில் பாவாடை தரிசனமும், மூலவர் முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்கார சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 17-ம் ஆண்டு நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று 17-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

    6 நாட்கள் நடைபெற்ற விழாவில் முதல் நாள் சந்தன காப்பு அபிஷேகமும், 2-ம் நாள் பன்னீர் அபிஷேகம், 3-ம் நாள் பஞ்சாமிர்தாபிஷேகம், நான்காம் நாள் விபூதி அபிஷேகம், ஐந்தாம் நாள் தயிர் அபிஷேகம், நடைபெற்றன.

    ஆறாவது நாளான இன்று டாக்டர் சிவனேசன் தலைமையில் பால்குடம் ஊர்வலம் போளூர் டவுன் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு நற்குன்று பாலமுருகன் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர் . நாளை (திங்கட்கிழமை) வள்ளி தெய்வானைக்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியை கோயில் நிர்வாகிகள் தலைவர் ராமச்சந்திரன், தர்மகத்தா செல்வம், துணை தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியம், என்றும் இறைவன் தொண்டில் மன்னு சுவாமிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதேபோல் போளூர் அருகே உள்ள ஆர் குன்னத்தூர் முருகர் கோவிலில் இன்று பாலாபிஷேகம் நடைப்பெற்றது.

    காளியம்மன் கோவிலில் இருந்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கருணா சுவாமிகள் தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று ஆர் குன்னத்தூர் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். இந்த விழா ஏற்பாடுகளை கருணா சாமிகள் செய்திருந்தார்.

    • கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சஷ்டி விழா நடைபெறவில்லை
    • இன்று விழா தொடங்கியதும் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருக்கோவில் ஆகும்.

    மேலும், ராமனிடம் அவரது மகன்களான லவா மற்றும் குசா என இரண்டு சிறுவர்கள் அம்பு எடுத்து போரிட்டதால் இந்த ஊருக்கு சிறுவாபுரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 

    சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது. இம்மாதம் 8-ம் தேதி மண்டலபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

    இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. இன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதன் பின்னர், உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துர்கா ஸ்டாலின் சகோதரி ஜெயந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், விருகை பிரபாகர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி தலைவர் ஜான்சிராணி தேவராஜ், துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பகலவன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சித்ராதேவி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.
    • 30-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னை:

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா இன்று தொடங்கியது. இந்த லட்சார்ச்சனை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

    முதல்நாளான இன்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    மேலும் நாளை (26-ந்தேதி) இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 27-ந்தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28-ந்தேதி நாக வாகனத்திலும் 29-ந்தேதி மங்கள கிரி விமானத்திலும் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடக்கிறது. 30-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நவம்பர் 1-ந்தேதி வடபழனி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2-ந்தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3-ந்தேதி வடபழனி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4-ந்தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.

    இதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவை யொட்டி வரும் 26-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து சுப்பி ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலு க்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு காலை 10 மணிக்கு யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபி ேஷகமும் மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடக்கி றது.

    விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 30-ந் தேதி மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடிவாரத்தில் அருள் பாலிக்கிறார்.

    மேலும் இரவு 8 மணிக்கு சென்னிமலை 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி காலை சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    எனவே கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். அப்போது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராம நாதசிவாச்சாரியார் விரதம் இருப்பவர்களுக்கு காப்பு அணிவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    நாகர்கோவில் பெரு விளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற

    25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல்நாள் சிறு வர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட் டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பால முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது.

    26-ந்தேதி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங் காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப் போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்கா ரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளி யீட்டு விழா மற்றும் பாராட்டு நடக்கிறது.

    நிகழ்ச்சியில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார். 29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.

    30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹா ரம் நடக் கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகி யவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்குராஜமன்னார் தலை மையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப் படுகிறது.

    31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ் ராம அர்ச்சனை, புஷ்பாபி ஷேகம், 6.30 மணிக்கு மணி கோல முருகன் அலங்காரத் தில் காட்சி அளித்தல், தீபா ராதனை ஆகியவை நடக் கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பாவாடை தரிசனமும் நடந்தது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. பக்தர்கள் கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க அனுமதிக்கப் படாததையொட்டி நேற்று காலையில் கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வழக்கம்போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது

    இதனைத்தொடர்ந்துசிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு "தங்க கவசம்" அணிவிக்கப்பட்டது. இதேபோல கருவறையில் அமைந்து உள்ள சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர் ஆகிய விக்ரங்களுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப் பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கு பெரும்பாலான பக்தர்கள் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தனர். இந்த கோவிலை பொறுத்தவரை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 5 மணிக்குமேல் இரவு 9 மணி வரையிலும், தமிழ் புத்தாண்டு அன்றும் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிப்பது. வழக்கம். அதன்படி கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சாமி கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆலய பணியாளர்கள், பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாண விருந்து அன்னதானம் பார்சலாக வழங்கப்பட்டது. இரவு சாமி-அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடந்தது.காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.
    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி பக்தி பரவசத்துடன் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில், சூரர்களை முருகப்பெருமான் வதம் செய்தார். திருக்கல்யாணம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
    தமிழ் கடவுளான முருகப்பெருமான், தேவர்களை காப்பதற்காக சூரர்களுடன் போர் புரிந்த நிகழ்வு ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை 6 மணிக்கு கிரிவீதிகளில் நடந்தது. முன்னதாக நேற்று பகல் 11.30 மணிக்கு மலைக்கோவிலில் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில், சக்திவேல் வைக்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனைக்கு பிறகு அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    அதன்பிறகு சூரனை வதம் செய்வதற்காக வில்-அம்பு, கேடயத்துடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டார். அவருடன் வீரபாகு, நவவீரர்கள் ஆகியோரும் புறப்பட்டனர்.

    பின்னர் சூரபத்மன், முருகப்பெருமானுடன் போர் புரியும் வகையில் புறப்பட்டு வடக்கு கிரிவீதி அடைதல் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி பிடாரி மயில்வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி பாதவிநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து சூரர்கள் தாரகாசூரன், பானுகோபன், சூரபத்மன், சிங்கமுகன் ஆகியோர் நான்குரத வீதிகளில் போர் முரசு கொட்டியபடி அடிவாரம் வந்தடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து தங்க சப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர், மாலை 5.30 மணிக்கு பாதவிநாயகர் கோவிலை வந்தடைந்தார். பின்னர் வில்-அம்பு, கேடயத்துடன் பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.

    அதையடுத்து திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதிக்கு பராசக்திவேல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தினர்.

    சின்னக்குமாரருடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீரபாகு மற்றும் நவவீரர்கள் போருக்கு புறப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம் நடந்தது.

    முன்னதாக கோவில் ஓதுவார்கள், கந்தபுராணம் பாடி தாரகாசூரனுக்கு முருகனின் பெருமையை எடுத்து கூறும் நிகழ்ச்சியும், நவவீரர்களுடன் வீரபாகு சென்று சமாதானம் பேசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஆனால் அறிவுரையை ஏற்காத தாரகாசூரன் முருகனை போருக்கு அழைத்தார். இதைத்தொடர்ந்து பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற கோவில் குருக்கள் பக்தி பரவசத்துடன் தாரகாசூரனை வதம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதேபோல் கிழக்கு கிரிவீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதையடுத்து இந்திர வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழாவும் நடந்தது. பின்னர் சக்திவேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு சம்ரோட்சன பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

    வழக்கமாக பழனி முருகன் கோவிலில் நடைபெறுகிற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர்.

    இதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் பழனிக்கு வருவர். இதனால் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பழனி கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது கிரிவீதிகள் களை இழந்து காணப்பட்டது.

    இருப்பினும் சில இடங்களில் பக்தர்கள் திரண்டிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். இரவு 8 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவின் 7-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) மலைக்கோவிலில் காலை 8 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது.

    பின்னர் இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.
    ×