search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருவிளை தெய்வி"

    • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
    • காகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் ஆல யத்தின் 54-வது ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி திங்கட்கிழமை தொடங்கி 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வருகிற 13-ந்தேதி திங்கட் கிழமை காலை 5 மணிக்கு புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மகாகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு பால முருகனாக உருகாப்பு நடை பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆறு படை மகிமை என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு நடை பெறுகிறது. இரவு 8 மணிக்கு ஓவியப்போட்டியும், 8.30 மணிக்கு மாபெரும் வண்ணக் கோலப்போட்டி நடைபெறு கிறது. இதில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசாக 3001, 2-ம் பரிசாக 2001, 3-ம் பரிசாக 1001 வழங்கப்படுகிறது.

    14-ந்தேதி செவ்வாய்க் கிழமை 2-ம் நாள் உழவர் விழாவாக நடைபெறு கிறது. அன்று இரவு 7 மணிக்கு திருமாங்கல்ய பூஜையும், 8 மணிக்கு மேஜிக் ஷோ நிகழ்ச்சியும், இசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. 15-ந்தேதி புதன் கிழமை பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு 7 மணிக்கு சொற்பொழிவும், 8 மணிக்கு மாபெரும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. 16-ந்தேதி வியாழக்கிழ மை காலை 6.30 மணி முதல் பூஜைகளும் ஆறுமுகனாக உரு காப்பும் நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு பாரதப்போருக்கு யார் காரணம் என்று தலைப்பில் விசாரணை மன்றம் நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.

    17-ந்தேதி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொ டர்ந்து சுவாமி போர்க் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருவிளக்கு பூஜையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி என். விக்டோரியா கவுரி முதல் திருவிளக்கு தீபம் ஏற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மகளிர் மாநாடும் நடைபெறுகிறது.

    18-ம் தேதி சனிக்கிழமை காலை 6-ம் நாள் கந்த சஷ்டி விழா, காலை 6.30 மணிக்கு உதய கால பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. 11 மணிக்கு கும்பாபி ஷேகமும், பகல் 12 மணிக்கு பெருவிளை அருள்மிகு சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியி டமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும்

    1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹா ரத்திற்குப் புறப் படுதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. அப்போது வண்ண கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 8.30 மணிக்கு தொழிலதி பர் கேட்சன் தலைமையில் போட்டி சிலம்பம் நிகழ்ச்சி ஆகியவையும் நடக்

    கிறது. 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 7-ம் நாள் திருக்கல்யாண விழாவாக நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு அன்னாபிஷே கமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும், 1 மணிக்கு அன்னதா னமும் வழங்கப் படுகிறது. அன்று மணக் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை புஷ்பாபிஷேக மும் அதனை தொடர்ந்து பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராதனையும் நடக்கி றது.

    இரவு 8.45 மணிக்கு மணிமகுடம் என்ற சமூக நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் முருக னுக்கு அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை, இன்னிசை கச்சேரி, சஷ்டி கவசம் வாசித்தல் ஆகி யவை நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் முன்பு பந்தல் போடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா ஏற்பாடுகளை கௌரவத் தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோ சகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் இராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கௌரவத் தலைவர் அருள் குமரன், உபத்தலைவர் இராதாகிருஷ்ணன் இணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல்முருகன், மண்டப பொறுப்பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல் சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    ×