search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்ஹாரம்"

    • முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
    • அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.

    கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.

    "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.

    இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.

    • விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாரா தனையும், மாலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.
    • சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13 -ந்தேதி கந்த சஷ்டி விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, சுவாமி சப்பர வீதிஉலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.

    கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் நகரின் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருநாள் மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் என்ற சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    இதபோல் சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், தென்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் அருள்பாலித்து வரும் பிரசி த்தி பெற்ற வாழை மர பால சுப்ரமணிய சுவாமி கோவி லில் கடந்த 13-ந்தேதி கந்த சஷ்டி விழா நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக் தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கோவி லில் சிறப்பு ஹோமம் நடை பெற்றது. நேற்று (சனிக் கிழமை) கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் கஜமுக சூரன், சிங்காசூரன், தாரகாசூரன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத் தில் பிரம்மாண்டமாக நடை பெற்றது.

    மாலை 7 மணிக்கு சுவா மிக்கு பாலபிஷேகம் நடை பெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தெய் வானை சமேத சிவசுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல் யாணம் மற்றும் வாழைமர பாலசுப்பிரமணிக்கு புஷ் பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்ட னர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், வைப்பாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து வேண்டி யும், கடன் பிரச்சினை தீரவும், நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரசம்ஹார விழா நடந்தது.
    • உற்சவருக்கு தீபாரதி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ் டியை முன்னிட்டு சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது அனைத்து சிவாலயங்க ளிலும், முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறு வது வழக்கம். சூரனை வதம் செய்து அசுரர்களிடம் இருந்து தேவர்களை காப்பதே சூரசம்ஹாரம் ஆகும்.

    அந்த வகையில் திருச்சுழி பூமிநாதன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாள் நடை பெறும் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யில் முருக பெருமான் சூரனை வதம் செய்தார்.முன்னதாக கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக முருகப்பெரு மான் அம்பிகையிடம் இருந்து சக்தி ஆயுதமான வேலாயுதம் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சோழ வந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று மாலை கோவில் முன்பு நடை பெற்றது. பக்தர்கள் வெற்றி வேல்முருகா, வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டியினர் செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன்-வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனிடம் இருந்து பூஜிக்கப்பட்ட வேல் வழங்கப்பட்டது. அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம் வடிவில் உருமாறி காட்சி அளிக்க முருகன் சூரனை வதம் செய்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவருக்கு தீபாரதி காண்பி க்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    • பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.

    விழாவையொட்டி பாலமுருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகங்கள் செ ய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் நாகரத்தினம், அர்ச்சுணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீ பாரதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளம் பகுதியில் முருகன் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு எளம்பலூர் பிரம்மரிஷி மலை யடிவாரத்தில் காக ன்னை ஈஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக முருகப்பெ ருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக செய்ய ப்பட்டு அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொ ண்டு முருகனை வழிப்ப ட்டனர். பின்னர் அனை வருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தவயோகி தவசிநாத சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில், வாலி கண்டபுரம் வாலீ ஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது.

    • முருகர் போரிட்டு சூராபத்மனின் தலையை கொய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆறு நாட்கள் திருவிழாவான கந்த சஷ்டி உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.

    திங்கட்கிழமை காலை கந்த சஷ்டி திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை காலை- மாலை யாகசாலை பூஜைகள், சுவாமி உள்புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

    வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. நேற்று மதியம் ஸ்ரீசண்முகர் அபிஷேகமும், மாலை ஸ்ரீ சண்முகர்வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுவாமி பிரகார புறப்பாடும் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று மாலை மண்ணடி அருகே உள்ள வடக்கு தெருவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்பொழுது மனிதன், ஆடு, சிம்மம், யானை, யாழி உள்ளிட்ட ஆறு உருவங்களில் சூராபத்மன் உருவெடுத்து முருகனிடம் போரிடுகிறார். முருகர் போரிட்டு சூராபத்மனின் தலையை கொய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர், மா மரத்தில் சூரபத்மன் தஞ்சம் அடைகிறார். எனவே, முருகர் மரத்தை பிளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சூரபத்மனின் வேண்டுதலை ஏற்று மயிலாகவும், சேவலாகவும் மாற்றி முருகர் தனது இரு பக்கங்களில் வைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை காலை சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற சூரசம்கார

    நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மாலை 4 மணிக்கு மேல், சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார்.
    • தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார்.

    அங்கு, முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வேலில், இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார்.

    தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

    மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அதற்காக, ஜெயந்திலநாதர் கடற்கரையில் அமைந்துள்ள மண்டபத்திற்கு செல்கிறார். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • போர்க்கடவுள் முருகப்பெருமான் அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி அசுரனை சூரசம்காரம் செய்தார் என்பது வரலாறு.
    • சுப்பிரமணியர் வடக்கு திசையில் இருந்த திருத்தணிகைக்குச் செல்லும் முன் வடக்கு நோக்கி வந்து இருந்த இத்தலம் தென்தணிகை எனப்படுகிறது.

    தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் புரியும். குன்று இருக்கும் ஊர் என்பதால் குன்றே பிரதானமாக, அத்தாக இருப்பதால் குன்றத்தூர் என்று பெயர் உண்டானது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும்-வாழுமிடம் என்பதற்கு இசைய இக்குன்றிலும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கோவில் கொண்டிருக்கிற இம்மலைக் கோவிலுக்குதான் தென் தணிகை என்று பெயர்.

    போர்க்கடவுள் முருகப்பெருமான் அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி அசுரனை சூரசம்காரம் செய்தார் என்பது வரலாறு. சூரபத்மன் என்ற அரக்கனுக்கு எதிரான போரில் அவர் சுவாமிமலை, திருத்தணிகை, திருவாவினன்குடி (பழனி), திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகிய ஆறு இடங்களில் தங்கினார். இந்தத் தலங்கள் ஒவ்வொன்றிலும், திருமுருகாற்றுப்படையில் புகழப்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. ஆண்டவரின் ஆறு போர் முகாம்கள் "அறுபடை வீடு" எனப்படுகின்றன.

    அதேபோல் தீயவற்றை அழித்து நல்லவற்றைக் காக்க கந்த புராணப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்டார். ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரிலும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்திலும், மாயாமலம் கொண்ட தாருகாசுரனை திருப்போரூரில் ஆகாயத்திலும் போர் புரிந்து சம்ஹாரம் செய்தார். சம்காரம் என்றால் தீயவற்றை அழித்து நல்லவற்றை வாழ வைத்தல் என்பதாகும். தாரகாசுரன் என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தன் படையை முன்னெடுத்துச் சென்று அவனுடன் திருப்போரூரில் வானில் இருந்தபடியே கடுமையான போர் செய்து அவனை வென்றார். சூரனை அழித்த பாவம் தீர, திருத்தணிகை செல்லும் முன் சிவ வழிபாடு செய்ய நினைத்தார்.

    சுப்பிரமணியர் திருப்போரூரில் இருந்து திருத்தணிகைக்கு செல்லும் தனது பயணத்தின்போது வழியில் குன்று ஒன்றைக் கண்டார். இயற்கையாய் அழகாய் அமைந்த மலை அவரைக் கவரவே, தவம் செய்ய விரும்பி அங்கு தங்கினார். திருச்செந்தூரில் செய்தது போலவே இங்கும் மலையடிவாரத்தில் பகையின் வலிமையை அழித்து தனக்கு போரின்போது "பற்றுக்கோடாக" துணைநின்ற சிவனின் அருவுருவத்தோற்றமாக சிவலிங்கம் ஒன்றை நிறுவி ஆழ்ந்த தியானம் தவம் முடித்து சிவபூஜை செய்து பயணம் மேற்கொண்டார் என்பது வரலாறு.

    சுப்பிரமணியர் வடக்கு திசையில் இருந்த திருத்தணிகைக்குச் செல்லும் முன் வடக்கு நோக்கி வந்து இருந்த இத்தலம் தென்தணிகை எனப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான முருகன் தலங்களில் வடக்கு நோக்கியபடி உள்ள திருமணக்கோலத்தில் உள்ள முருகன் கோவில் இதுவாகும், தங்கள் துன்பம் நீக்கிய திருமுருகப்பெருமானை அவரது துணைவிகளுடன் தணிகை போல் தனித்தனி சன்னதிகளில் அல்லாது ஒருசேர காட்சி தந்து அருள் செய்ய வேண்டுமென துன்பம் நீங்கிய தேவர்கள் வேண்டியதால் அங்கே வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் வடக்கு நோக்கி நின்றவாறே காட்சி தந்தார். மேலும் மக்களுக்கு அருள் செய்யத் தொடர்ந்து இம்மலையில் துணைவிகளுடன் வித்தியாசமாகக் காட்சி தந்தருள வேண்டுமென தேவர்கள் வேண்டியபடி இன்றுவரை காட்சி தரும் தலம் இத்தென் தணிகையாகும் இக்கோவிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருந்து அருளுகிறார். சுப்பிரமணியர் இரு தேவிகளுடன் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு தேவியுடன் மட்டுமே தரிசிக்க முடியும். முருகனின் ஒருபுறம் பார்த்தால் வள்ளியுடன் தரிசிக்க முடியும், மறுபுறம் நகர்ந்து பார்த்தால் தெய்வயானையுடன் தரிசிக்கலாம். 

    கருவறையைச் சுற்றி உள் பிரகாரம் உள்ளது. முருகப்பெருமான் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகியோர் கோஷ்ட தேவதைகளாக உள்ளனர். இக்கோவிலின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இது 9 முதல் 13-ம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. இக்கோவில் 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, 1726 -ம் ஆண்டில் மதுரை நாயக்கர்களால் மேம்படுத்தப்பட்டது எனவும் சான்றுகள் குறிக்கிறது.

    மலையடிவாரத்தில் 'ஸ்ரீ சரவண பொய்கை' எனப்படும் ஒரு பெரிய குளம் உள்ளது. அடிவார மண்டபத்துடன் கூடிய மலைக்கோவில் அடிவாரத்தில் இருந்து 84 படிகள் உள்ளது. மலையடிவாரத்தில் அசுரனை அழித்த பாவம் நீங்க முருகன் நிறுவி வழிபட்ட கந்தழீசுவரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. புறப்பொருள்திணைகளில் ஒன்றான "கந்தழி" என்பதற்கு "வழிபடும் தெய்வம் பற்றுக்கோடாக துணை நிற்பது" என தொல்காப்பியம் குறிக்கிறது. சூரனை அழிக்க துணை நின்ற ஈசன் கந்தழீசுவரர் என வழிபடப்படுகிறார்.

    முருகன் சூரனை அழிக்கப் புறப்பட்டபோது தாய்மாமன் திருமால் ஆசி வழங்கி அருளவந்து குடி கொண்டுள்ளார். அவ்வாறு ஆசி வழங்க வந்தவர் ஊரிலிருந்து வந்ததால் "ஊரகத்தான்" என்ற பெயரோடு தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

    அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற இக்கோவிலுக்கு படியேறி மலைமீது செல்லும் வழியில் வலஞ்சுழி விநாயகர் கோவிலும் மலைமீது முன் மண்டபமும் சுமார் 50 அடி உயரம் உடைய மூன்று நிலையுடன் கூடிய ராஜ கோபுரமும் அமைந்துள்ளன. திருச்சுற்றில் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, வில்வ மரத்தடி விநாயகர் ஆகியோரின் பிரார்த்தனை பரிவார சந்நிதிகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பிள்ளை வரம் வேண்டுவோர் பிரார்த்தனை செய்து கொண்டு பிரார்த்தனை நிறைவேற மரத்தொட்டில் கட்டுகிறார்கள். அரச மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் அளிக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து மரத்தில் தொட்டில் கட்டி விருப்பங்கள் நிறைவேறி,அவர்கள் கோவிலுக்குத் திரும்பி, குழந்தையின் எடைக்கு சமமான பழங்கள் அல்லது சர்க்கரையை பிரசாதமாக வழங்குகிறார்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கோவிலுக்குச் சென்று தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து விபூதி பெற்றுச் சென்று பலன் அடைகிறார்கள்.

    சுமார் 50 ஆண்டுகளாக கந்தசஷ்டி விழாவில் மக்கள் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்து லட்சார்ச்சனையில் பங்கு கொண்டு கந்த சஷ்டியன்று முடிவுபெறும்.

    50 ஆண்டுக்குப்பிறகு சூரசம்காரம் இணைந்த திருவிழாவாக முன்பு நடந்தது போல் மீண்டும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    2023ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை முருகனைப் போற்றும் கந்தசஷ்டி லட்சார்ச்சனை சென்ற ஆண்டுகள் போல் நடைபெறும். 17-ந் தேதி மாலை 6 மணிக்கு மலையடிவரத்தில் இருக்கும் கந்தழீசுவரர் அம்பாள் நகைமுகவல்லியிடம் சென்று முருகப்பெருமான் சக்திவேல் வாங்கி மீண்டும் மலைக்கு எழுந்தருள்வார். 18-ந் தேதி பகல் 12 மணிவரை பக்தர்கள் சத்ரு சம்கார திரிசதி மகாலட்சார்ச்சனை செய்து முருகனை வேண்டிட மலையில் இருந்து முருகன் வில்லேந்திய வேலனாக குதிரை வாகனத்தில் மலையடிவாரத்திற்கு வந்து மாலை சுமார் 4 மணிக்கு சூரசம்காரம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு சம்காரம் செய்து வேகத்துடனிருக்கும் முருகப்பெருமானுக்கு கீழேயுள்ள கந்தழீசுவரர் கோவிலில் மகாசாந்தி அபிஷேகம் நடந்து சிவபூஜை செய்து கந்தனீச்சுரமுடையார் எனப்பெயர் சூட்டப்பட்டு மலைக்குத் திரும்புவார்.

    19-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து புதியதாக செய்யப்பட்ட தங்க மயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை எழுந்தருளி அருள் வழங்குவார்கள். 

    இரா.இரகுநாதன்

    இரா.இரகுநாதன்

    குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. வாகனங்கள் (கார், பைக், ஆட்டோ) 84 படிகள் ஏறி நடக்க முடியாதவர்கள் மலையில் உள்ள கோவிலின் முன்புறம் வரை மலைக்குச் செல்ல வாகனப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்குச் செல்பவர்கள் சென்னை வெளிவட்ட சாலையில் இருந்து விரைவில் கோவிலுக்குச் செல்லலாம். பல்லாவரம் மற்றும் பூந்தமல்லியில் இருந்தும் குன்றத்தூருக்கு நிறைய பஸ்கள் உள்ளன.

    மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றில் இருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது குமார வழிபாட்டுத் தத்துவம்.

    கந்தசஷ்டி சூரசம்கார நிகழ்வுகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்வதால் நம் முன் ஊழ்வினைகள் நீங்கும், பாவங்கள் நீங்கி ஆன்ம சுத்தி கிடைக்கும்.

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

    இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கம்
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவு

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படைவீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    4-வது நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன் மண்டபத்தில் ஆடும் மயில் வாகனத்தில் தண்டா யுதபாணி பக்தர்களுக் காட்சியளித்தார்.

    நாளை கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது.

    அதனை தொடர்ந்து 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம், மகா தீபாராதனை காட்டப்படுகிறது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    பிற்பகல் 3 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை யொட்டி காலை முதலே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹா ரத்தை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) மற்றும் 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே பக்தர்கள் கோவில் சார்பில் இய க்கப்படும் வாகனங்களிலும், மலைப்படிக்கட்டுகள் வழியாகவும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 வாகனங்கள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. நாளை சூரசம்ஹாரம் என்பதால் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் மேலும் கூடுதல் வாகனங்களை இயக்குவது என முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

    மேலும் மருதமலை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சூரசம்காரத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர மருதமலை முருகன் கோவில் பகுதியில் டிரோன்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் இணை

    ஆணையர் ஹர்சினி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    நாளை மறுநாள் (19-ந் தேதி) திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ×