search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன் கோவிலில்"

    • சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை திறக்கப்படும்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    காங்கயம்:

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சிவன்மலை முருகன் கோவில் தரப்பில் கூறியுள்ளதாவது:-

    சந்திர கிரகண நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ஏற்படுவதை அடுத்து, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    • சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.

    மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேரோட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் கோவிலின் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமியின் வேலுடன் புறப்பட்டு 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பின்னர் மீண்டும் கைலாசநாதர் கோவிலை அடைந்தனர்.

    • சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

    இதில் 2 கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு யாகம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னிமலையில் நேற்று வினை தீர்க்கும் வேலவன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டது.

    அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது நான்கு ராஜ வீதிகளிலும் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் சென்று சூரர்களை வதம் செய்கிறார்.

    இறுதியில் வான வேடிக்கைகள் முழங்க முருகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதேபோல் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.

    இதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவை யொட்டி வரும் 26-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து சுப்பி ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலு க்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு காலை 10 மணிக்கு யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபி ேஷகமும் மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடக்கி றது.

    விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 30-ந் தேதி மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடிவாரத்தில் அருள் பாலிக்கிறார்.

    மேலும் இரவு 8 மணிக்கு சென்னிமலை 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி காலை சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    எனவே கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். அப்போது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராம நாதசிவாச்சாரியார் விரதம் இருப்பவர்களுக்கு காப்பு அணிவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    ×