search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று நடை அடைப்பு
    X

    சிவன்மலை முருகன் கோவில்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று நடை அடைப்பு

    • சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை திறக்கப்படும்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களின் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    காங்கயம்:

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சிவன்மலை முருகன் கோவில் தரப்பில் கூறியுள்ளதாவது:-

    சந்திர கிரகண நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ஏற்படுவதை அடுத்து, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடை சாத்தப்பட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×