search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது- வடபழனி முருகன் கோவிலில் 6 நாட்கள் லட்சார்ச்சனை
    X

    கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது- வடபழனி முருகன் கோவிலில் 6 நாட்கள் லட்சார்ச்சனை

    • முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.
    • 30-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னை:

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா இன்று தொடங்கியது. இந்த லட்சார்ச்சனை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

    முதல்நாளான இன்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    மேலும் நாளை (26-ந்தேதி) இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 27-ந்தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28-ந்தேதி நாக வாகனத்திலும் 29-ந்தேதி மங்கள கிரி விமானத்திலும் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடக்கிறது. 30-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நவம்பர் 1-ந்தேதி வடபழனி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2-ந்தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3-ந்தேதி வடபழனி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4-ந்தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×