என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது- வடபழனி முருகன் கோவிலில் 6 நாட்கள் லட்சார்ச்சனை
- முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.
- 30-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
சென்னை:
சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா இன்று தொடங்கியது. இந்த லட்சார்ச்சனை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.
முதல்நாளான இன்று காலை 9 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
மேலும் நாளை (26-ந்தேதி) இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 27-ந்தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28-ந்தேதி நாக வாகனத்திலும் 29-ந்தேதி மங்கள கிரி விமானத்திலும் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடக்கிறது. 30-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
நவம்பர் 1-ந்தேதி வடபழனி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2-ந்தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3-ந்தேதி வடபழனி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4-ந்தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்