search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகசாலை பூஜை"

    • மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது.
    • மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கும்பாபிஷேகம் செய்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவிலுக்கு கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

    அதன்படி இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (21-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. இதனை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.15 மணியளவில் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய் வானை உடனுறை முருகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் விமான கோபுர கலசத்தின் மீது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கலச நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார். மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு திருமண விழா நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தலைமையிலான பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • கள்ளழகர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
    • பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளதை யொட்டி யாகசாலை பூஜைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்ட பத்தில் இன்று காலை முதல் நடைபெற்றது.

    அழகர்கோவில் கள்ள ழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜையில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. எஜமானர் அழைப்பு, வாஸ்து சாந்தி, புன்யாக வாசனம், கும்ப ஆராதனம், அக்னி ஆராதனம், மஹா சாந்தி பூர்ணாகுதி, உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ராஜகோபுரம் சுமார் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் வண்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி பாலாலய பூஜையுடன் ராஜகோபுரம் வண்ணம் தீட்டும் பணிகள் ஆரம்பிக் கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சுமார் 120 அடி உயரம் கொண்ட கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டது. ராஜ கோபுரத்தின் கலசம் 6.25 அடி உயரம் கொண்ட ஏழு கலசங்கள் உடையது. தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப் பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் காட்சி யளிக்கிறது.

    • கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாக பூஜையை முன்னிட்டு அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார்.

    அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல் அங்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் தங்கி விரதம் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 35 ஆயிரம் பக்தர்கள் தங்கலாம்.

    தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் ஆகி, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவில் 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி அங்கி ருந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூபம் தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்நாளான 20-ந்தேதி (திங்கட்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    திருவிழா 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழா வெள்ளிக்கிழமை 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முரு கன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 27 யாக குண்டங்கள் அமைப்பு
    • கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
    • நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், நாளை கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின.

    யாக சாலை மண்டபத்தில் தானியங்கள் கொட்டப்பட்டும், கலசங்கள் தயார் செய்யப்பட்டும், யாகசாலை அலங்கரிக்கப்பட்டது. யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகபூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், 3ம் கால யாகபூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொங்கு நாட்டின் பாரம்பரியக் கலையான பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதனை கொங்கு பண்பாட்டு மையத்தினர் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து மங்கை வள்ளிகும்மி குழுவினரின், கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., உலகேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவில் விழாகமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மேல்மலையனூர் அருகே ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் பழமையான ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை தனபூஜை, யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்பு யாகசாலையிலிருந்து கடம்புறப்பட்டு கோவிலை வலம் வந்தவுடன் கோவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×