search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbhabhishekam"

    • சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
    • வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    பல்லடம்,

    பல்லடம் கடைவீதியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில்,தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பொன்காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், பல்லடம் அறநிலையத்துறை ஆணையர் ராமசாமி, திருப்பணிகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும், வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • காடூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், பூர்ணபுஷ்பகலாம்பிகா, சமேத படைகாத்த அய்யனார், செம்மலையப்பா, பூமலையப்பா, முத்தையா , ராகு. கேது, 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசி லிங்கங்கள், 9 கிரக லிங்கங்கள், அஷ்ட லிங்கங்கள், கருப்புசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று அதிகாலை மங்கள இசையுடன் சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் காடூர் பரம்பரை அறங்காவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ காணியானர்கள், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



    • இன்று இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெறுகிறது.
    • நாளை விமான கோபுர கும்பாபிஷேகம், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புராணச் சிறப்பு கொண்ட கோவிலாகும். அகஸ்தியரால் வழிபடப்பட்ட பெருமை வாய்ந்த ஆலயமாகும்.

    இந்த கோவிலில் கும்பாபிஷேத்திற்காக கடந்த 10-ந்தேதி கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக த்திற்கான முன்னேற்பாடு கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் நாளை (19-ந்தேதி) காலை கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து இன்று காலையில் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.


    பின்னர் பாபநாசத்திலிருந்து 108 தீர்த்த குடம் கொண்டு வரப்பட்டது.இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெறுகிறது. பின்னர் நாளை அதிகாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கண்திறப்பு, தீபாராதனை நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவி ற்கான ஏற்பாடுகளை 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் யுசி சி நண்பர்கள் செய்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் அருகே மூலஸ்தம்மன்கோவிலில் 23ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த வாழ்முனி நாயக்கர்- மீனாட்சி அம்மாள் தம்பதியரால் இக்கோவில் சிறிய அளவில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

    அம்மனை வழிபட்டால் வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியத்தினை அருளுவதாக நம்பப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த நிலையில் வாழ்முனி தம்பதியரின் பேரனும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பெரும் பொருட்செலவில் இந்த கோவிலை தற்போது புதுப்பித்து கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு மகா கணபதி பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்று காலை 10.30 மணி அளவில் கோபுர கும்பாபிஷேகமும், 11 மணியளவில் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா. பாண்டியராஜன் மற்றும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முத்தியால்பேட்டை முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்து உள்ளார்.

    ×