search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா-நாளை நடக்கிறது
    X

    உடையார் பிள்ளையார்.


    கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா-நாளை நடக்கிறது

    • இன்று இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெறுகிறது.
    • நாளை விமான கோபுர கும்பாபிஷேகம், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புராணச் சிறப்பு கொண்ட கோவிலாகும். அகஸ்தியரால் வழிபடப்பட்ட பெருமை வாய்ந்த ஆலயமாகும்.

    இந்த கோவிலில் கும்பாபிஷேத்திற்காக கடந்த 10-ந்தேதி கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக த்திற்கான முன்னேற்பாடு கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் நாளை (19-ந்தேதி) காலை கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து இன்று காலையில் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.


    பின்னர் பாபநாசத்திலிருந்து 108 தீர்த்த குடம் கொண்டு வரப்பட்டது.இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெறுகிறது. பின்னர் நாளை அதிகாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கண்திறப்பு, தீபாராதனை நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவி ற்கான ஏற்பாடுகளை 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் யுசி சி நண்பர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×