கடலூர் துறைமுகம் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 4-ந் தேதி நடக்கிறது

கடலூர் துறைமுகம் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 4-ந் தேதி காலை நடக்கிறது.
கடலூர் துறைமுகம் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில்
கடலூர் துறைமுகம் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில்
Published on

கடலூர்:

புண்ணிய பூமியாம் இந்த பாரத தேசத்தில் சக்தியானவள் ஆன்மாக்களை உய்யும்பொருட்டு பல அவதாரங்களில் பல இடங்களில் அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் சக்தியின் அவதாரமாக கடலூர் துறைமுகம் பகுதியில் ஐந்து கிணற்று மாரியம்மன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் விநாயகர், முருகன், அய்யப்பன், பாவாடைராயன், காத்தவராயன், பேச்சியம்மன் ஆகிய பரிவாரங்களுடன் அமைய பெற்றுள்ளது. இந்த கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதன்படி ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 4-ந் தேதி காலை நடக்கிறது. முன்னதாக 2-ந் தேதி காலை 9 மணிக்கு தேவதாஅனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹாசங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நவகிரக தனபூஜை, தீர்த்த ஸங்கிரணம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

மாலை 6 மணி அளவில் மங்கள இசை தொடங்குகிறது. அதன்பின்னர் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்கு ரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கும்பஅலங்காரம், கலாகர்‌ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் காலயாகபூஜை ஆரம்பம், மூல மந்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

வருகிற 3-ந் தேதி காலை 8.30 மணி அளவில் மங்களஇசை தொடங்குகிறது. அதன்பின்னர் விசே‌ஷசந்தி, 2-ம் காலயாகபூஜை ஆரம்பம், மூலமந்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

மாலை 5.30 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து விஷேசசந்தி, 3-ம் காலயாகபூஜை ஆரம்பம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூலமந்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.

4-ந் தேதி காலை 7 மணி அளவில் மங்கள இசை தொடங்குகிறது. அதன் பின்னர் விஷேசசந்தி, 4-ம் காலயாக பூஜை ஆரம்பம், கோபூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை, மூலமந்திரஹோமம், அஸ்த்திரஹோமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது.

9.45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும் 10.10 மணிக்கு ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.15 மணிக்கு அய்யப்பன் சன்னதி விமான கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இந்த கும்பாபிஷேகவிழா திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி நடைபெறுகிறது.

விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கடலூர் மாநகராட்சி பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை செடல் உற்சவதரார்கள் குழு தலைவர் கணேசன், கவுரவத்தலைவர் டாக்டர் இராம.முத்துக்குமரனார், செயலாளர் கயிலை உதயவேலு, துணை செயலாளர் அரங்கநாதன், துணை பொருளாளர் சதீஷ் மற்றும் செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com