என் மலர்tooltip icon

    வழிபாடு

    7-ந்தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்: இன்று யாகசாலை பூஜை
    X

    7-ந்தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்: இன்று யாகசாலை பூஜை

    • கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    • சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.

    நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    Next Story
    ×