search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரவு"

    • வேன் உரிமையாளருக்கு ரூ.1¾ லட்சம் நிவாரணம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
    • காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு

    பெரம்பலூர் ,

    லெப்பைக்குடிகாடு ஜமாலிநகர், மேற்கு தனிசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(வயது 46). மெக்கானிக்கான இவர் திருச்சி வரகனேரியில் சென்னை-திருச்சி புறவழிச்சாலையில் உள்ள இலகுரக வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 30.3.2017 அன்று ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 224 செலுத்தி ஒரு வேனை வாங்கினார். இதற்காக திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்சு நிறுவனத்தில் ரூ.11 ஆயிரத்து 376-க்கு சந்தா செலுத்தி காப்பீடு பெற்றிருந்தார்.அந்த வேன் கடந்த 16.5.2017 அன்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷாஜகான் 6.11.2017 அன்று தனது வாகனம் பழுது பார்க்கும் பட்டறை அருகே, அந்த வேனை நிறுத்தினார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்த வேனை காணவில்லை. யாரோ அந்த வேனை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷாஜகான், மங்களமேடு போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் 10.11.2017 அன்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் திருட்டு போன வேனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி மங்களமேடு போலீசார், அந்த வேனை காப்பீடு செய்திருந்த நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தை அணுகி வேன் காணாமல் போனதற்கான வழக்குப்பதிவு அறிக்கை, போலீசார் அளித்த தடையின்மை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, காப்பீட்டு தொகையை வழங்கிட கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு காப்பீட்டு தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம் அலைக்கழித்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாஜகான், காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் மீது வக்கீல் இல.மானேக்சா மூலம், காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினர். இதில் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், நியூ இந்தியா அஷ்யூரன்சு காப்பீட்டு நிறுவனத்தின் திருச்சி மேலாளர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண தொகையை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தனர்.

    • 3 விவசாயிகளுக்கு, அதிகாரிகள் ரூ.1½ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
    • 2021ம் ஆண்டு மழையினால் கன மழையினால் வெங்காயம் நாசமானதற்கான காப்பீடு தொகை

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்த மெய்யனின் மகன் கார்த்திகேயன். இவர் நக்கசேலத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் கடந்த 2021-ம் பயிரிட்டிருந்த ஆண்டு சிறிய வெங்காயத்திற்கு காப்பீடு செய்து, பிரீமியம் தொகையாக ரூ.7,810-ஐ மத்திய அரசின் வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தினார். இதேபோல் மெய்யன் தனது வயலில் கடந்த 2021-ம் சாகுபடி செய்திருந்த சின்ன வெங்காயத்திற்கு, ரூ.1,464-ஐ பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு பெற்றிருந்தார். அப்போது கனமழை பெய்து வெங்காயப்பயிர்கள் அழுகி, விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன், தனது மனைவி ஹேமலதா பெயரில் உள்ள வயலில் 2020-ம் ஆண்டு சிறிய வெங்காயத்திற்கு பயிர் காப்பீடு செய்து, ரூ.5 ஆயிரத்து 91-ஐ பிரீமியமாக செலுத்தியிருந்தார். பருவ மாறுபாடு காரணமாக சின்ன வெங்காயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், மெய்யன் மற்றும் ஹேமலதா ஆகிய 3 பேரும் தனித்தனியே வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தை அணுகி பயிர்காப்பீட்டு தொகையை அனுமதிக்க முறையிட்டனர். ஆனால் பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் 3 பேரும் அலைக்கழிக்கப்பட்டனர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 3 பேரும் வக்கீல் அய்யம்பெருமாள் மூலம், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு செய்து வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரித்தனர். இதில் மனுதாரர்கள் கார்த்திகேயன், அவரது தந்தை மெய்யன், ஹேமலதா ஆகிய 3 பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ, தலா ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகை தலா ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

    • சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
    • எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

    சென்னை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் கூறி உள்ளது.

    இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

    முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு கூறியுள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது.

    சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

    அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    • போட்டிகளை நடத்தி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காமராஜரின் பணிகள் தொடர்பான பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டி மாணவ, மாணவிகளுக்கு நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை போன்று வட்டார, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.கல்வி அலுவலகங்களிலும், காமராஜ் போட்டோ வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

    காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் வருகிற 15ந் தேதி அரசு பள்ளிகள் செயல்படும். அன்று வேலை நாள். இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.
    • வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு ஜூன் 1-ந் தேதி முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நிலைப்பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த, 29ந் தேதி முதல் இன்று 9-ந்தேதி வரை நீர் திறக்கப்படுகிறது.

    இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், மேலும் 5 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், நாளை 10ந் தேதி முதல், 15-ந் தேதி வரை பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி வீதம் 190.08 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

    • வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.
    • அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் எர்ணாகுளத்திற்கு சென்று லெஸ்பியன் ஜோடியாக வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இருவரும் கொளஞ்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக தங்கி இருந்தனர். இது அபீபாவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் அவர்கள் அங்குச் சென்று அபீபாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அபீபாவை அவரது பெற்றோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமையா மனுவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது அபீபா, சுமையாவுடன் உறவில் இருந்த போதிலும் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து சுமையாவின் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் பெஞ்ச் முடித்து வைத்தது. மேலும் லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    1934 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறுவதாக அறிவித்துள் ளோம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கிராமத்தில் உள்ள 5 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர்.
    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு சமூகங்கள் சார்ந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.

    20 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாண்டபி கிராமத்தில் ஒரு கும்பல் நேற்று இரவில் துப்பாக்கி சூடு நடத்தியது. கிராமத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த தன்னார்வலர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.

    பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் தன்னார்வலர்கள் 3 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கிராமத்தில் உள்ள 5 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.

    இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் செய்யப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், ஒரு குறிப்பிட்ட பழங்குடியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    மணிப்பூர் மாநிலம் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருவதாகவும், ஊரடங்கு நேரம் குறைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 153 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்கள் பாதுகாக்கப்படுவதாகவும் மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.

    இதையடுத்து மணிப்பூர் நிலைமை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய புதிய அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அறிக்கை அடிப்படையில்தான் வழக்கை விசாரிக்க முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கு விசாரணை 10-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • உரிமம் பெறாத நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தரமான பால் உற்பத்தியை அதிகப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பால்வளத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    மாவட்ட அளவிலான ஆலோசனை குழு மூலமாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் இடங்களில், உரிமம் பெறாத நிறுவ னங்கள் பால் கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்தி டவும் மற்றும் உரிமை பெறாத தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை யாளர்களை தடை செய்திட வும், தரமான பால் உற்பத்தி யினை அதிகப்படுத்திடவும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இக்குழுக்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய துறைகள் சார்ந்த அலுவலர்களை குழு உறுப்பினர்களாக உள்ளடக்கி மாவட்ட அளவி லான ஆலோசனை குழுக்கள் உருவாக்கி பணி களை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த குழுவின் மூலம் இப்பணி களை மேற்கொள்ளப்படு வதை மாத ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அளவிலான கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து பாலில் கலப்படம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனி யார் நிறுவனங்கள் தங்களது பால்கோவா தயாரிப்பில் அரசு தயாரிப்பு என குறிப்பிடுவது தனியா ருக்கு உரிமை இல்லை. ஆவின் நிறுவனம் மட்டுமே அரசு தயாரிப்பு என குறிப்பிட உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பின்னர் சூலக்கரையில் அமைந்துள்ள பால் குளி ரூட்டும் நிலையம் மற்றும் ரூ.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை தீவன உற்பத்தி நிலையத்தையும் அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வம், ஆவின் பொது மேலாளர் ஷேக் முகம்மது ரபி, துணை பதிவாளர்(பால்வளம்) நவராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிைய சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது, மதுைர ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    திருவாடானை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டு களுக்கு முன்பு 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த நீர் தேக்க தொட்டி தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    அதன் தூண்களில் உள்ள கம்பிகள் பலமிழந்து வெளியே தெரிகின்றது.இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் எதிரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகமாக சென்று வரும் பகுதி என்பதால் நீர்நிலை தொட்டி இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகவே இதனை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அரசு தரப்பில் அளித்த பதிலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. அதனால் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீர்நிலை தொட்டியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அதனை 6 மாதத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.
    • நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.‌

    தஞ்சாவூர்:

    தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கையின்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 டாஸ்மாக் கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தஞ்சை மாவட்டம்

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 166 டாஸ்மாக் கடைகளில் 15 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.

    தஞ்சையில் சி.ஆர்.சி. டெப்போ எதிரே, தஞ்சை நாகை ரோடு, கீழவாசல், கீழஅலங்கம், மானோஜியப்பாவீதி, வடக்கு மெயின்ரோடு, கிழக்கு போலீஸ் நிலையம் ரோடு, கீழவாசல் அண்ணாசாலை, தெற்கு அலங்கம், சாந்தப்பிள்ளைகேட், பட்டுக்கோட்டையில் மார்க்கெட் ரோடு, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சிநகர் ஆகிய 15 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

    திருவாரூர் -நாகை

    இதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 10 டாஸ்மாக் மது கடைகள் மூடப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் 7 மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பல்வேறு கட்சியினர், பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

    • இணைய தளத்தில் வெளி மாநில தொழிலாளர் விவரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
    • தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு

    கரூர்,

    தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள், முடிதிருத்தம் செய்யும் நிலையங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். அவர்களின் விவ ரங்களை வேலை அளிப்பவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தும் முன்பாக தொழிலாளர் நலத்துறையின் வெளிமாநில தொழிலாளர் வலைதள பக்கத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண் விவரம், கைப்பேசி எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ×