search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெஸ்பியன் ஜோடி"

    • வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.
    • அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் எர்ணாகுளத்திற்கு சென்று லெஸ்பியன் ஜோடியாக வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இருவரும் கொளஞ்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக தங்கி இருந்தனர். இது அபீபாவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் அவர்கள் அங்குச் சென்று அபீபாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அபீபாவை அவரது பெற்றோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமையா மனுவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது அபீபா, சுமையாவுடன் உறவில் இருந்த போதிலும் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து சுமையாவின் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் பெஞ்ச் முடித்து வைத்தது. மேலும் லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம்.
    • அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது.

    கொல்கத்தாவை சேர்ந்த மவுசுமி தத்தா மற்றும் மவுமிதா மஜூம்டர் ஆகிய லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை கொல்கத்தாவில் ஜோவா பஜாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பாரம்பரிய பெங்காலி சடங்குகளுடன் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து மவுசுமி தத்தா கூறுகையில், காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம். அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது. இது சமூகத்தை பற்றியது அல்ல, அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள், யாருடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புகிறார்கள் என்பதை பற்றித்தான். மேலும் தங்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    • கேரளாவை சேர்ந்த இளம்பெண்கள் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது.
    • கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிலா மற்றும் பாத்திமா நூரா என்ற லெஸ்பியன் ஜோடி கோர்ட்டில் மனு செய்து சேர்ந்து வாழ்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆதிலா-பாத்திமா நூரா லெஸ்பியன் ஜோடி சென்னையில் வசித்து வருகிறார்கள்.

    அவ்வப்போது இவர்கள் சமூக வலைதளத்தில் இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை வைரலாக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் ஒரு லெஸ்பியன் ஜோடி தங்களை சேர்த்து வைக்க கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளனர். ஆதிலா-பாத்திமா நூராவின் வழக்கு கேரள ஐகோர்ட்டிலேயே முடிந்து போக இந்த ஜோடியின் விவகாரம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்விபரம் வருமாறு:-

    கேரளாவை சேர்ந்த இளம்பெண்கள் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து தங்கும் அளவுக்கு நெருக்கம் அதிகமானது. இதுபற்றி அறிந்த ஒரு பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை, அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.

    அதன்பின்பு அவரால் தனது தோழியை சந்திக்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்துபோன பெண், தனது தோழியை தன்னோடு சேர்த்து வைக்க கோரி கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பெற்றோருடன் இருக்கும் பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டது. இது ஐகோர்ட்டில் மனு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே ஒரு லெஸ்பியன் ஜோடியை சேர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு தங்களையும் அதுபோல சேர்ந்து வாழ அனுமதிக்கும் என்று எதிர்பார்த்த பெண்ணுக்கு கேரள ஐகோர்ட்டின் உத்தரவு ஏமாற்றத்தை அளித்தது.

    எனவே அவர் கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் பெற்றோர் பிடியில் இருக்கும் பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரது கருத்தை கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை மூடி, முத்திரையிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு சார்பில் பெண் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

    • லெஸ்பியன் ஜோடியான இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
    • கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்தவர் ஆதிலா. இவர் தனது தோழி பாத்திமா நூராவுடன் இணைந்து வாழ விரும்பினார். லெஸ்பியன் ஜோடியான இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

    குறிப்பாக பாத்திமா நூராவின் குடும்பத்தினர் அவரை ஆதிலாவிடம் இருந்து பிரித்து மறைத்தனர். இது தொடர்பாக ஆதிலா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாத்திமா நூராவை கண்டுபிடித்து தரும்படி கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார்.

    அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாத்திமா, ஆதிலாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வசித்து வருகின்றனர்.


    இந்த நிலையில் ஆதிலா-பாத்திமா நூரா ஜோடி, பாரம்பரிய திருமண உடைகளை அணிந்துகொண்டு, பின்னணியில் கடலைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் மோதிரங்களை மாற்றிக் கொண்டது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதன் மூலம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட தாகவும், அதற்கு முந்தைய நிச்சயதார்த்த போட்டோ ஷூட் தான் இது எனக் கருதி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இருவரும் தாங்கள் நிச்சயதார்த்தமோ, திருமணமோ செய்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். இது போட்டோஷூட்டின் ஒரு பகுதி தான் என அவர்கள் கூறினர். படங்களின் கருப்பொருளைப் பார்த்தால் குழப்பம் புரியும் என்று ஆதிலா தெரிவித்தார்.

    • திருமண பந்தம் ஆண்-பெண்ணுக்கு இடையேதான் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
    • இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது ஏதோ சமூகத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் முன்வருவது இல்லை.

    சென்னை:

    பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நமது முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் சில திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலம் மலரும் நட்பின் வாயிலாகவே நிச்சயிக்கப்படுகிறது. அதிலும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களே அதாவது ஆண், ஆணையும், பெண், பெண்ணையும் தங்கள் வாழ்க்கை துணையாக கரம் கோர்த்து திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் வினோத சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

    அந்த வகையில் ஒரே பாலினத்தை விரும்பும் 'லெஸ்பியன்' ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்‌ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும், வங்காளதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சுபிக்‌ஷா தமிழக பாரம்பரிய முறைப்படி மடிசார் சேலை அணிந்தவாறு தனது தந்தையின் மடியில் அமர, எதிர் முனையில் பைஜாமா அணிந்தவாறு டினா தாஸ் உறவினரின் மடியில் அமர ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.

    சுபிக்‌ஷாவின் தந்தை முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். சம்பிரதாயம் முடிந்ததும் இல்வாழ்க்கையில் சிறகடித்து பறக்கிறது லெஸ்பியன் ஜோடி. கை நிறைய சம்பளம் வாங்கும் ஆடிட்டரான சுபிக்‌ஷாவின் குடும்பம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை பூர்வீகமாக கொண்டது. மதுரையில் இருந்து அவருடைய குடும்பம் கத்தார் நாட்டுக்கும், பின்னர் அங்கிருந்து கனடாவில் உள்ள கல்கரி நகருக்கும் இடம் பெயர்ந்தது. சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா, கல்கரி நகரில் சிறுவர்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

    வங்காளதேசத்தின் வடகிழக்கில் உள்ள சிறிய நகரான மூல்விபசாரை பூர்வீகமாக கொண்டவர் டினா தாஸ். இவருடைய சகோதரி, திருமணமாகி கனடாவின் மொண்ட்ரியால் நகரத்தில் வசித்து வந்தார். அவரோடு, கடந்த 2003-ம் ஆண்டு தனது பெற்றோரோடு ஐக்கியமாகினார் டினா தாஸ். சிறு வயதில் இருந்தே டினா தாசுக்கு லெஸ்பியன் உணர்வுகளில் ஈடுபாடு ஏற்பட்டது. இதனை ஒரு நோயாக கருதிய அவரது பெற்றோர், 19 வயதில் ஆண் ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் 4 ஆண்டுகளில் அந்த பந்தம் அறுந்து போனது.

    லெஸ்பியன் உள்பட இரு பாலின உறவுகளில் நாட்டம் கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சுபிக்‌ஷாவும், லெஸ்பியன் உறவில் ஈடுபடும் நபராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டினா தாசும் சமூக ஊடகங்களின் மூலமாக பரீட்சயமாகி, கல்நகரி நகரில் சந்தித்து தங்களுடைய உறவை வளர்த்து வந்தனர். லெஸ்பியன் உறவுகொள்பவர்கள் கலந்துகொள்ளும் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இதனால் டினா தாசுடன் பேசுவதை அவரது சகோதரி நிறுத்திக்கொண்டார். குடும்பம் அவரைவிட்டு, விலகி நின்றது.

    காலமும், விடா முயற்சியும் அனைத்துக்கும் மருந்து போடும் என்பது போல சுபிக்‌ஷாவை அரவணைத்துக்கொண்டது டினா தாஸ் குடும்பம். மறுமுனையில் சுபிக்‌ஷா குடும்பமும் சமஸ்கிருத முறையில் திருமணத்தை நடத்தி, இல்லற வாழ்க்கைக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறது. சென்னையில் நடந்த வினோத திருமணத்தில் சுபிக்‌ஷா தரப்பில் அவருடைய தந்தையார் சுப்பிரமணி, தாயார் பூர்ணபுஷ்கலா மற்றும் 84 வயதான பாட்டி பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதுபோன்ற திருமணங்கள் நமது வழக்கப்படி நடப்பது இல்லை என்று பெற்றோர் பல முறை சுட்டிக்காட்டியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் டினா தாஸ் உடனான உறவை கைவிட விரும்பாத சுபிக்‌ஷா தனது பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்தார். இதுபோன்ற விவகாரங்களில் பெற்றோர்தான் மகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பார்கள். ஆனால் சுபிக்‌ஷா விஷயத்தில் நடந்தது வேறு. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த சுபிக்‌ஷா இறுதியாக டினா தாசை கரம் பிடித்திருக்கிறார்.

    சுபிக்‌ஷா, டினா தாஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தை கனடாவில் பதிவு செய்துள்ளனர். கல்கரி நகருக்கு வினோத ஜோடி சிறகடித்து பறப்பதற்கு முன்பு, தெற்காசியாவுக்கு இன்ப சுற்றுலா செல்ல உள்ளனர்.

    இதுகுறித்து சுபிக்‌ஷா கூறுகையில், "நாங்கள் நினைத்திருந்த கனவு இதுதான். அது நிறைவேறும் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடந்த 6 வருடங்களாக இருதரப்பினரின் குடும்பத்தினரோடும் ஒற்றுமையாக இருந்து எங்களுடைய மரபுகளின்படி சடங்குகளை முறையாக நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா கூறும்போது, 'முதலாவதாக, இந்த திருமணத்தால் இந்தியாவில் உள்ள எங்களுடைய குடும்பத்தினர் உறவுகளை முறித்துக்கொள்வார்களோ என்ற அச்சம் இருக்கிறது. சுபிக்‌ஷா எப்படி இந்த சமூகத்தில் வாழ்வார். அவள் தாய்மை உணர்வு அடைவாளா? என்பதிலும் பயம் இருக்கிறது' என்றார்.

    சுபிக்‌ஷாவின் பாட்டி பத்மாவதி, 'எங்கள் பிள்ளைகள் மனம் உடைந்து விலகிச் செல்வதை விடவும், எங்கள் பக்கம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம். இருவருக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டால், பயத்தை விட்டுவிட்டு அன்பை தேர்ந்தெடுக்கவேண்டும்' என்று கூறினார்.

    திருமண பந்தம் ஆண்-பெண்ணுக்கு இடையேதான் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அதுபோன்ற இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது ஏதோ சமூகத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் முன்வருவது இல்லை.

    • எர்ணாகுளத்தை அடுத்து உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும், பாத்திமாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.
    • கேரள ஐகோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் உறவினர்கள் யாரும் எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    கேரளாவில் நிஜத்தில் ஒன்று... நிழலில் ஒன்று என 2 லெஸ்பியன் ஜோடிகள் அம்மாநிலத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    அப்படி என்னதான் நடந்துள்ளது? வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே லெஸ்பியன் சினிமா ஒன்றின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி மூச்சு முட்ட வைத்துள்ளன. கன்னியாஸ் திரி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் தனது தோழி யுடன் உதட்டோடு உதடு சேர்த்து லிப்கிஸ் அடிக்கும் காட்சி கேரளா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    முதலில் நிஜ லெஸ்பியன் ஜோடி ஏற்படுத்திய பரபரப்பை பார்க்கலாம்.

    எர்ணாகுளத்தை அடுத்து உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும், பாத்திமாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். இருவரும் சவுதியில் படித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாகி இருக்கிறது. இதனால் நீ இல்லை என்றால் நான் இல்லை. நான் இல்லை என்றால் நீ இல்லை என்ற ரீதியில் 2 பேரும் ஒன்றாக இருக்க தொடங்கினர். இருவருக்கிடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கொந்தளித்த குடும்பத்தினர் இருவரையும் பிரித்தனர். பாத்திமாவை சவுதியில் இருந்து கேரளாவுக்கு அழைத்து வந்து விட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த ஆதிலா, கேரளாவுக்கு வந்து பாத்திமாவை கண்டுபிடித்து விட்டார்.

    இதன் பின்னர் இருவரும் ஒன்றாக வாழ தொடங்கினர். ஆனால் பாத்திமாவின் குடும்பத்தினர் விடவில்லை.

    பாத்திமாவை, ஆதிலாவிடம் இருந்து மீண்டும் பிரித்து சென்று விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஆதிலா கேரளா ஐகோர்ட்டை நாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் உறவினர்கள் அதற்கு தடையாக உள்ளனர். எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட கேரள ஐகோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் உறவினர்கள் யாரும் எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    இதனை மலையாள தேசத்தில் உள்ள லெஸ்பியன் ஆதரவாளர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த தீர்ப்பு வந்து சில நாட்களே ஆன நிலையில் சினிமா மூலமாக இன்னொரு லெஸ்பியன் ஜோடி புதிய புயலை கிளப்பி உள்ளது. 'ஹோலி வூண்ட்' (புனித காயம்) என்ற பெயரில் கேரள மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள படத்தில் டிரைலர் வெளியாகி அம்மாநில இளைஞர்கள் மத்தியில் படம் எப்போது வரும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டிரைலரில் 2 பெண்கள் காமதாகத்தில் தவிப்பதுபோல படுசூடாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் டிரைலர் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், கன்னியாஸ்திரி வேடத்தில் இருக்கும் பெண், இன்னொரு பெண்ணின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    என்னடா இது கேரளாவுக்கு வந்த சோதனை? என்று கூறிக்கொண்டு சமூக ஆர்வலர்கள் கண்டனக்குரலுடன் களம் இறங்கியுள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரைலர் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டைரக்டர் அசோக் ஆர்.நாத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் லெஸ்பியன் தோழிகள் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    டிரைலரே இப்படி சூட்டை கிளப்பியுள்ள நிலையில் முழு படமும் எப்படி இருக்க போகிறதோ? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்ப எக்கச்சக்க எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பழைய நெருங்கிய தோழிகள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது உணர்ச்சி பிரவாகம் தான் இது என்று சினிமா குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களும், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களும், மனிதர்கள் தான். அவர்கள் பற்றி வேறு விதமாக சிந்திக்க கூடாது என்பதை படம் உணர்த்துகிறது என்று சினிமா குழுவினர் கூறி இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்து இப்படி கேரளாவில் அனல் பறக்கும் விவகாரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில் இளம் ரசிகர்களோ 'ஹோலி வூண்ட்' படத்தை காண ஆர்வமாக உள்ளனர். ஓ.டி.டி. தளத்தில் இந்த படம் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.

    ×