search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு
    X

    இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

    • ராமநாதபுரம் அருகே இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிைய சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது, மதுைர ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    திருவாடானை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டு களுக்கு முன்பு 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த நீர் தேக்க தொட்டி தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    அதன் தூண்களில் உள்ள கம்பிகள் பலமிழந்து வெளியே தெரிகின்றது.இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் எதிரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகமாக சென்று வரும் பகுதி என்பதால் நீர்நிலை தொட்டி இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகவே இதனை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அரசு தரப்பில் அளித்த பதிலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. அதனால் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீர்நிலை தொட்டியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அதனை 6 மாதத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×