search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு தள்ளுபடி"

    • அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு.
    • 2023-ம் ஆண்டு மார்ச் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவு.

    தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு, விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.
    • இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    புதுடெல்லி:

    2014 முதல் 2017 வரையிலான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.

    இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு (2017-18, 2018-19, 2019-20, 2020-21) வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்றொரு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

    நீதிபதி யஷ்வந்த் சர்மா, புருஷேந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    • சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
    • சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு சென்ற பிறகு அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

    கடைசியாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐேகார்ட்டு மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

    இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல் வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    சிவில் கோர்ட்டில் மட்டும் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து முடிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எந்த பிடிமானமும் இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்று அரசியல் தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அரசியல் விமர்சகரான தராசு ஷ்யாம் கூறியதாவது:-

    இனியும் ஒ.பன்னீர்செல்வத்தின் சட்டப் போராட்டம் என்பது நிறைவேறாத கனவை போன்றது.

    விசாரணை நீதிமன்றம் கட்சியின் நிலைமையையும் பார்க்கும். அதை பார்க்கும் போது பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி இருப்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனிச் சின்னமாக பரிசு பெட்டி சின்னத்தை கேட்டு பெற்றார். அதே போல் ஓ.பன்னீர்செல்வமும் தன் தரப்பு வேட்பாளர்களுக்கு தனி சின்னங்களை தேடுவதே சிறப்பாக இருக்கும்.

    அவரது ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றார்.

    • கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
    • காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது.

    பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

    பிறகு, கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சிறப்பு நீதிமன்றம் முன் வந்தது. இதில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    • ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    • இளைஞர் காங்கிரஸ் சார்பாக இரணியல் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாகர்கோவில் :

    குஜராத் மாநிலம் சூரத் விசாரணை போட்டியில் நடந்து வந்த ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    சூரத் விசாரணை கோர்ட் அளித்த தண்டனைக்கு தடைகோரி குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நேற்று ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் மண்டல தலைவர் சிவபிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து வடசேரி போலீசார் நவீன்குமார் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உட்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 101 பேர் மீதும் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அழகிய மண்டபத்தில் மாவட்ட தலைவர் பினுலால்சி ங் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் இக்னேஷியஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 155 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்ப ட்டனர். கைது செய்யப்பட்ட 155 பேர் மீதும் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 3 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 273 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இளைஞர் காங்கிரஸ் சார்பாக இரணியல் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் டைசன் தலைமை தாங்கினார். இளைஞர்கள் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். குளச்சல் தொகுதி தலைவர் ஜேக்கப், விஜி மோகன், சுமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    1934 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறுவதாக அறிவித்துள் ளோம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது.
    • நுகர்வோருக்கு பாதுகாப்புதான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா கூறுகையில், தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனவும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான்; முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

    ×