search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனு- தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
    X

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனு- தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

    • தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது.
    • நுகர்வோருக்கு பாதுகாப்புதான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா கூறுகையில், தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனவும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான்; முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×