என் மலர்
நீங்கள் தேடியது "NIA's plea"
- கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
- காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது.
பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
பிறகு, கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சிறப்பு நீதிமன்றம் முன் வந்தது. இதில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.






