search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissal of petition"

    • சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
    • சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு சென்ற பிறகு அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

    கடைசியாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐேகார்ட்டு மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

    இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல் வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    சிவில் கோர்ட்டில் மட்டும் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து முடிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எந்த பிடிமானமும் இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்று அரசியல் தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அரசியல் விமர்சகரான தராசு ஷ்யாம் கூறியதாவது:-

    இனியும் ஒ.பன்னீர்செல்வத்தின் சட்டப் போராட்டம் என்பது நிறைவேறாத கனவை போன்றது.

    விசாரணை நீதிமன்றம் கட்சியின் நிலைமையையும் பார்க்கும். அதை பார்க்கும் போது பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி இருப்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனிச் சின்னமாக பரிசு பெட்டி சின்னத்தை கேட்டு பெற்றார். அதே போல் ஓ.பன்னீர்செல்வமும் தன் தரப்பு வேட்பாளர்களுக்கு தனி சின்னங்களை தேடுவதே சிறப்பாக இருக்கும்.

    அவரது ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றார்.

    • கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.
    • இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக அறிவிப்பு.

    கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில்," பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு" தெரிவித்திருந்தார்.

    மேலும், "அப்போது, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக" தெரிவித்த நீதிபதி, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    1934 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதிஷ் சந்திரா சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம். புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறுவதாக அறிவித்துள் ளோம் என்று தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை மே மாதம் 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ×