search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl"

    • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.

    இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

    எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவம் குறித்து சுபா குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார், சுபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிங்கை:

    அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பொன்நகர் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுபா (வயது27). இவர் இன்று காலையில் வீட்டில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    கோவை:

    திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்த இளம்பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    அப்போது வீட்டில் இருந்த 5 அரை பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றார். வீட்டில் இருந்த மகள் மாயமானதால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், நேராக அன்னூர் வந்து, தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று காதலர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இளம்பெண் மாயமானதாக திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

    அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்து, காதலருடன் நின்றிருந்த தங்கள் மகளை பார்த்து அழுதனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளிடம் சென்று பேசினர்.

    அப்போது அவரிடம், உன்னை எப்படி எல்லாம் வளர்த்தோம். நீ கேட்டதை எல்லாம் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி இருக்கையில் நீ இப்படி பண்ணலமா? என கண்ணீர் விட்டு கெஞ்சி பாசப்போரா ட்டம் நடத்தினர்.

    முதலில் ஒன்றும் சொல்லாமல் இளம்பெண் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பெற்றோர் மகளிடம் பேசினர். பெற்றோர் பேசிய பேச்சை கேட்டதும் இளம்பெண்ணின் மனது மாறிவிட்டது.

    அவர், தனது பெற்றோரிடம் நான் எனது காதலனை விட்டு, விட்டு உங்களுடனே வந்துவிடுகிறேன். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம்.

    ஏனென்றால் நகையை எடுத்து கொண்டு சென்றது நான் தான், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அப்படி என்றால் வருகிறேன் என தெரிவித்தார். பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.

    இதையடுத்து இளம்பெண் போலீசாரிடம் நான் எனது பெற்றோருடனே சென்று விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் தனது காதல் கணவர் கட்டிய தாலியையும், கழுத்தில் இருந்து கழற்றி காதல் கணவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார்.

    இதையடுத்து போலீசார் வாலிபருக்கு அறிவுரைகளை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • இளம்பெண் திடீரென மாயமானார்.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (வயது19). வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமானார்.

    கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அப்போது கொடுத்த புகாரின் பேரில் கருப்பசாமி என்பவருடன் தங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தந்தை சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை ஒன்று உள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(வயது 47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    மேலும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கினர்.
    • போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மங்களத்தை சேர்ந்தவர் 38 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒருமகன் உள்ளார்.

    இளம்பெண்ணின் மாமியார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை மாமியார் தொடர்பு கொண்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் 4 நாட்கள் இங்கு வந்து தங்கி விட்டு செல்லுமாறு அழைத்தார். இதையடுத்த அந்த பெண், தனது கணவர், மகனுடன் கிணத்துக்கடவில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவு அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.

    தனது மனைவியின் சத்தம் கேட்டு எழுந்த கணவர் அந்த வாலிபரை விரட்டி சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார். பின்னர் தர்ம அடி கொடுத்து கிணத்துக்கடவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஜே.சி.பி. ஆபரேட்டர் கார்த்திக் (வயது 26) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.
    • இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், வேல் நகரை சேர்ந்தவர் கோபி ராஜா. இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கோபிராஜா குடி போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் மோனிஷா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மோனிஷா கணவருடன் சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதன் பின்னர் கோபி ராஜாவின் தாய், தந்தை சமாதானம் பேசி மீண்டும் மோனிஷாவை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோபிராஜா மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால் வீட்டு வாடகை, வண்டி தவணை எப்படி கட்ட முடியும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

    இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி மோனிஷா வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அங்கு இருந்த தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிராஜா தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பரமசிவம் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளனர்.
    • பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முத்துசெல்வியை காணவில்லை.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). இவரது மகள் முத்துசெல்வி (25). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்க ளாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பரமசிவம் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முத்துசெல்வியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவரது மகள் கையில் ஒரு பையுடன் சென்ற தாக அக்கம் பக்கத்தினர் தெரிவி த்துள்ளனர். ஆனால் அவரை எங்கு தேடியும் கிடைக்கா ததால் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா (வயது 38). கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகன் கணீஷ் பாண்டியுடன் (19) வசித்து வந்தார்.

    கணீஷ் பாண்டி அதே பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று தாய், மகனிடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கணீஷ் பாண்டி மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது ம னைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

    ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார் பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் பொன்னுச்செல்வி (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றார். ஆனால் பெற்றோர் படிக்குமாறு கூறியுள்ளனர்.நேற்றும் இது தொடர்பாக பிரச்சினை இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பொன்னுச்செல்வி நள்ளிரவு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்த சிதம்பரநாதன் மகள் அனு தர்ஷினி (வயது 17).
    • சமீப காலமாக அனு தர்ஷினி செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவரது மனைவி கலா. இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதில் 3-வது மகள் அனு தர்ஷினி(வயது 17).அனுதர்ஷினி ஏர்வாடியில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் படுத்திருந்த அனு தர்ஷினி இரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டில் இருந்து சேலையை எடுத்துக் கொண்டு சமைய லறைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை கலா எழுந்து பார்த்தபோது அனு தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றார்.

    • காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அன்னஞ்சி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் விஸ்வா (வயது 25). இவர் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த பிரியதர்ஷினி (22) என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரும் தேனி அன்னஞ்சி வீட்டில் வசித்து வந்தனர்.

    பிரியதர்ஷினிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது மாமியார் மீனாட்சி க.வி லக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    ஆனால் சிகிச்சையில் இருந்த பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×