search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் இளம்பெண் மாயம்
    X

    சங்கரன்கோவிலில் இளம்பெண் மாயம்

    • பரமசிவம் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளனர்.
    • பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முத்துசெல்வியை காணவில்லை.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). இவரது மகள் முத்துசெல்வி (25). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்க ளாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பரமசிவம் மற்றும் அவரது மனைவி வெளியூர் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முத்துசெல்வியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவரது மகள் கையில் ஒரு பையுடன் சென்ற தாக அக்கம் பக்கத்தினர் தெரிவி த்துள்ளனர். ஆனால் அவரை எங்கு தேடியும் கிடைக்கா ததால் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×