என் மலர்
நீங்கள் தேடியது "early in the morning"
- சூரிய உதயத்தை பார்த்து கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
- களைகட்டிய புதுவை கடற்ரை.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
முதலே புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர். கடற்கரை சாலையில் கடலில் குளிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையையும் மீறி குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.
புதுவை நோணாங்குப்பம் படகு குழாமில் படகில் சவாரி செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி சென்றனர்.
இதேபோல் புதுவையின் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.
மதிய வேளையில் பிரபல உணவகங்களில் மேஜையை பிடிக்க வரிசையில் நின்றனர்.
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
- மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






