search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

    • இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா (வயது 38). கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகன் கணீஷ் பாண்டியுடன் (19) வசித்து வந்தார்.

    கணீஷ் பாண்டி அதே பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று தாய், மகனிடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கணீஷ் பாண்டி மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது ம னைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

    ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார் பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் பொன்னுச்செல்வி (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றார். ஆனால் பெற்றோர் படிக்குமாறு கூறியுள்ளனர்.நேற்றும் இது தொடர்பாக பிரச்சினை இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பொன்னுச்செல்வி நள்ளிரவு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×