இளம்பெண் திடீர் மாயம்

இளம்பெண் திடீரென மாயமானார். ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் திடீர் மாயம்
Published on

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (வயது19). வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமானார்.

கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அப்போது கொடுத்த புகாரின் பேரில் கருப்பசாமி என்பவருடன் தங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தந்தை சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com