search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்ெகாலை"

    • இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.
    • கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே மேட்டத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாடம் படிக்கவில்லை என்று ராஜேஸ்வரியை திட்டி உள்ளனர். இதனால் கோபித்துகொண்ட மாணவி ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் ராஜேஸ்வரி குதித்து தற்கொலை செய்தார். அப்போது வயல்வெ ளிக்குச் சென்றவர்கள் கிணற்றில் செருப்பு மிதந்துவதை பார்த்து ஊர் பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் பொதுமக்கள் ஒன்று கூடி அங்கு பார்த்த போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் ராஜேஸ்வரி என தெரியவந்தது. திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன்மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை அவரை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர்.
    • இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 30). இவரும் முத்துமீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி மொபைல் போனில் அதிகளவில் பேசி வந்துள்ளார்.

    இதனால் இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வந்ததால் முத்துமீனா கோபித்துக் கொண்டு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார்.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரன் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×