search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    நாங்குநேரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்த சிதம்பரநாதன் மகள் அனு தர்ஷினி (வயது 17).
    • சமீப காலமாக அனு தர்ஷினி செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவரது மனைவி கலா. இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதில் 3-வது மகள் அனு தர்ஷினி(வயது 17).அனுதர்ஷினி ஏர்வாடியில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் படுத்திருந்த அனு தர்ஷினி இரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டில் இருந்து சேலையை எடுத்துக் கொண்டு சமைய லறைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை கலா எழுந்து பார்த்தபோது அனு தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×