search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman"

    • பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு போனது.
    • நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது42), விவாகரத்தா னவர். இவர் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.கே.நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    அவர்தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், மோதிரம், வளையல்கள், பணம் ரூ.20ஆயிரம், 2 செல்போ ன்கள் ஆகியவற்றை தனது பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகைகள், பணம் செல்போன்கள் ஆகியவை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர் அறைக்குள் புகுந்து பணம், நகைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து லாட்ஜில் விசாரித்த போது அங்கிருந்தவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணா நகர் போலீசில் கார்த்திகா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • இரவில் வீட்டிற்கு வெளியே சென்ற போது விஷப்பாம்பு கடித்தது.
    • ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாண்டையார் இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து போனார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது39). இவர் இரவில் வீட்டிற்கு வெளியே சென்ற போது விஷப்பாம்பு கடித்தது.

    உடனே சிவரஞ்சனியை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவரஞ்சனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்து 3 மாதங்களில் இளம் பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
    • வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).

    துணை வட்டார

    வளர்ச்சி அதிகாரி

    இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.

    பீரோ திறந்து கிடந்தது

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.

    28 பவுன் நகை

    அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 தனிப்படைகள்

    நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து பெண் பலியானார்.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ஆர். ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரது மனைவி அன்னலட்சுமி (வயது44). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இயற்கை உபாதை கழிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்ற போது அங்கு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அங்கிருந்து வீட்டிற்கு வந்த அன்னலட்சுமி உறவி னர்களிடம் தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் அன்னலட்சுமியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்ன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண், அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
    • போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவையை சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று அலுவலகம் சென்றார். அதன்பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார்.

    இளம்பெண் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டினார். இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கோபத்தை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். இது அந்த நபருக்கு வசதியாக அமைந்துவிட்டது. எனவே அவர் துணிச்சலாக மீண்டும், மீண்டும் அந்த பெண்ணுக்கு ஆபாச செய்கை காட்டினார்.

    இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண், அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது பெண்ணுக்கு பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும் ஆதரவுக்குரல் எழுப்பினர். உடனே அந்த நபர் பஸ்சில் இருந்து நைசாக இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அந்த பெண் விடவில்லை. பஸ்சில் இருந்து குதித்த அவரை சுற்றி வளைத்து பிடித்து தடுத்து நிறுத்தினார்.

    எனக்கு உன் பேத்தி வயதுதான் இருக்கும். என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்து கொள்கிறாயே, உனக்கு மனசாட்சி உள்ளதா. உன் மனைவி, பிள்ளைகளின் நம்பரை கொடு, நான் அவர்களிடம் நியாயம் கேட்கிறேன் என்று கேட்டு உள்ளார். ஆனால் போன் நம்பரை கொடுக்க அவர் மறுத்தார்.

    இதனால் இளம்பெண் ஆத்திரம் அடைந்து செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக அடித்தார். அப்போது சுற்றி நின்ற பொதுமக்களும் தர்மஅடி கொடுத்தனர்.

    தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டனர். அவருக்கு பொதுமக்கள் தாக்கியதில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த நபரை போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இளம்பெண் புகார் அளிக்க மறுத்ததால் அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இதற்கிடையே ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை இளம்பெண் செருப்பால் அடித்த நிகழ்வை, யாரோ சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்து உள்ளனர். இது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • தனது கணவர் மற்றும் 10 வயது மகனை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைக்கிறார்.
    • இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்ததாக அந்த பெண் கூறுவது போல காட்சிகள் உள்ளது.

    சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவர் மற்றும் 10 வயது மகனிடம் வெளிப்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண் தான் கர்ப்பமான செய்தியை வெளிப்படுத்த தனது கணவர் மற்றும் 10 வயது மகனை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைக்கிறார்.

    அதில் ஒரு அழகான பொம்மை மற்றும் கர்ப்ப பரிசோதனை குழாய் இருந்தது. கணவர் அதை திறந்து பார்த்ததும், தனது மனைவி கர்ப்பமானதை அறிந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது. அப்போது சிறுவனிடம் அவரது தந்தை, அம்மா கர்ப்பமாக இருக்கிறாள் பாபி என கூறுகிறார்.

    அதைக்கேட்டு அந்த மகனும் மகிழ்ச்சி அடைகிறார். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்ததாக அந்த பெண் கூறுவது போல காட்சிகள் உள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

    • 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் சீலநா யக்கன்பட்டியில் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. அங்கு ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெத்தநாயக்கன்பா ளையம் மணியார் குண்டத்தை சேர்ந்த குமார் (வயது 39) என்வர் டிராக்டர் வாங்க விண்ணப்பம் அளித்தார். அதற்கு குமாரிடம் நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் நோட்டுகளை மாவட்ட மேலாளிடம் கொடுக்க குமார் வந்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் லுங்கி அணிந்து அலுவலகத்திற்கு வந்தனர். குமார் மாவட்ட மேலாளர் சாந்தியிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார். ஆனால் அவர் அந்த பணத்தை அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்க அறிவுறுத்தினார்.

    அதன்படி குமார் கொடுத்த பணத்தை உதவி யாளர் பெற்றுக் கொண்டார். அப்போது போலீசார் கையும் களமாக பிடித்து மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தியை கைது செய்தனர்.

    தொடர்ந்து இரவு முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்று அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதைனிடையே, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் பெண்கள் கிளை சிறையில் அவர்களை அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
    • இது குறித்து கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளக்குறிச்சியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 1 ½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இளம் பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது 1 ½ வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு திரும்பிய கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 1 ½ வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார்.
    • ரேஷ்மா திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கொழிஞ்சாம்பாறை:

    பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர் பிரதேஷ். இவர் படித்து முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது33) என்பவர் அறிமுகம் ஆனார்.

    அவர், அந்த வாலிபரிடம், நான் ஒரு அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். நீங்கள் வேலை தேடுவதாக அறிந்தேன். எனக்கு குருவாயூர் கோவிலில் முக்கிய அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலமாக உங்களுக்கு நான் குருவாயூர் கோவிலில் வேலை வாங்கி தருகிறேன். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றார்.

    வாலிபரும் வேலை கிடைக்க உள்ளது என நம்பி, அந்த பெண் தெரிவித்த அனைத்திற்கும் தலையாட்டினார். மேலும் வேலை வாங்கி தருவதற்காக அந்த பெண்ணிடம் 2 தவணையாக ரூ.10 லட்சத்தை கொடுத்தார்.

    அவர் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் வாலிபர் சந்தேகம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

    அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை வாலிபர் உணர்ந்தார்.

    உடனடியாக அவர் சம்பவம் குறித்து ஆலத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரேஷ்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

    ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார். அவர் வைத்திருந்த காரிலும் கோவில் நிர்வாக விஜிலென்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியபடியே வலம் வந்தார்.

    அப்போது, அவர் வேலை தேடி வரும் வாலிபர்கள், இளம்பெண்களை குறி வைத்து அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்து விட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

    மேலும் திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த மாதம் கோட்டயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரேஷ்மா, அதில் உள்ள எண்ணை எடுத்து அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசினார். அடிக்கடி செல்போனில் அந்த வாலிபரிடம் பேசி வந்தார்.

    அப்போது, ஒருநாள் வாலிபரிடம் உங்களை எனக்கு பிடித்துள்ளது. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தையை அள்ளி தெளித்தார். நாம் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு சிறிய பிரச்சினை மட்டும் உள்ளது.

    அதனை சரி செய்து விட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ரேஷ்மாவின் பேச்சில் மதி மயங்கிய அந்த வாலிபர், அவர் என்ன கேட்டாலும் செய்ய தயார் என்ற மனநிலையிலேயே இருந்தார்.

    பெண் பிரச்சினை என்று சொன்னவுடன் என்ன வென்று அவரிடம் கேட்டார். அப்போது அந்த பெண் எனக்கு 6 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அதனை கட்டிவிட்டால் நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். பெண்ணின் பேச்சில் மயங்கி கிடந்த வாலிபரும், அவர் கேட்ட உடனே பணத்தை எடுத்து கொடுத்தார்.

    பணம் கொடுத்த மறுநாளில் பெண்ணிடம் இருந்து போன் வரவில்லை. தினமும் போன் செய்து பேசும் பெண் திடீரென பேசாததால், வாலிபர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    அப்போது தான் அந்த வாலிபருக்கு, இளம்பெண் தன்னை ஆசைவார்த்தை கூறி அவரது வலையில் வீழ்த்தியதும், அதன் மூலம் தன்னிடம் இருந்து பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாலிபர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் ரேஷ்மா, இதுபோன்று 20-க்கும் மேற்பட்டோரிடம் திருமணம் செய்வதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.50 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில், ரேஷ்மா ஆலத்தூரில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரியில் இளம்பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் வசித்து வருபவர் ராஜா (வயது 35). இவரது மனைவி முத்துசெல்வி (33). இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரியப்பன் (23). மாரியப்பன் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ராஜாவிடம் அடிக்கடி பண உதவி பெற்று வந்தாராம். இதனிடையே இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடந்து விரோதம் ஏற்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த முத்துசெல்வியிடம் மாரியப்பன் உனது கணவனை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துசெல்வி, அவர் கடைக்கு சென்றுள்ளார் என்று பதில் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் முத்து செல்வியை குத்தியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த முத்து செல்வி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்து பலரும் திரண்டு வந்தனர். இதனால் மாரியப்பன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    உடனடியாக முத்துசெல்வி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரபகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் மாரியப்பனை தேடி வருகின்றனர்.
    நாகை அருகே லாரி கவிழ்ந்து பெண் பலியானார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கல்பனா (வயது 40). இவர் கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்களுடன் இணைந்து தினமும் லாரியில் மீன்களை ஏற்றி கொண்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை கல்பனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேம்பு (52), பொன்னாச்சி (63), மீனாட்சி (45), பட்டம்மாள் (60), சத்யா (44) உள்ளிட்ட 7 மீனவ பெண்களுடன் சேர்ந்து டெம்போ லாரியில் மீன் லோடு ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி புறப்பட்டார். 

    லாரியை கரிகாலன் என்பவர் ஓட்டினார்.அப்போது கீழ்வேளூர் அருகே சென்ற போது லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது.

     இதனால் நிலை தடுமாறிய லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. லாரியில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் கல்பனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  வேம்பு, மீனாட்சி, பட்டம்மாள் உள்ளிட்ட 7 பெண்கள் மற்றும் டிரைவர் கரிகாலன் ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தாழையூத்து அருகே பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    நெல்லையை சந்திப்பு சி.என். கிராமத்தை சேர்ந்தவர் உடையார் (வயது 40). இவரது மனைவி சுப்புலட்சுமி.
    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுப்புலட்சுமி நெல்லையை அடுத்த மேல தாழையூத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

       இந்நிலையில் நேற்று உடையார் சி.என். கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (25) என்பவரை அழைத்துக்கொண்டு மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு சுப்புலட்சுமியையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீட்டின் கதவு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

     
    இது தொடர்பாக சுப்புலட்சுமி தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடையார் மற்றும் நாகராஜனை கைது செய்தனர்.
    ×