search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில்"

    • நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
    • வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).

    துணை வட்டார

    வளர்ச்சி அதிகாரி

    இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.

    பீரோ திறந்து கிடந்தது

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.

    28 பவுன் நகை

    அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 தனிப்படைகள்

    நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஜன்னல் கம்பி வழியாக புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
    • ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே இனயம் கடற்கரை கிராமம் நடுத்தெரு பகுதி 13-வது அன்பியத்தை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 47).

    இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்ப வத்தன்று இரவில் வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஜாண்சன் கையில் கிடந்த ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.

    மேலும் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டி னுள் நுழைந்து திருடி யிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டுபோன பொருட்க ளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்

    சேலம்:

    ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கட்டிட மேஸ்திரி. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2¼ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சேகர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்.இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தாளவாடி போலீசார் சாந்தி என்பவரை கைது செய்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த கல் மண்டிபுரம், சோழகர் தொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது அங்கு 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இது குறித்து தாளவாடி போலீசார் சாந்தி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் ஒரு வாலிபர் புகையிலை பொரு ட்களை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காளிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வீட்டில் வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஹான்ஸ், போதை பாக்கு உள்பட 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகாகுணமங்கலம் கிராமத்தில் ஆதம்மாளிக். இவரது வீட்டில் இரவு வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துவைத்துவிட்டு தூங்கும்போது 1.30 மணிக்கு மேல் பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .

    • வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
    • அதிகாரிகள் நடவடிக்கை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில் சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசி 2 இடங்களில் உள்ள வீடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக பொது மக்கள் குன்னம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் மற்றும் தனி வருவாய் அலுவலர் ஏகாம்பரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி அல்லி நகரம் அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? ரேஷன் அரிசியை எவ்வாறு இவ்விடத்தில் கடத்தி வந்தனர் என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல், அக். 13-

    இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமை யிலான போலீசார் கண்டன் விளை சென்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
    • தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து (வயது45 ). இவர் குடும்பத்தினருடன் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மேலும் சிங்கப்பூரில் கன்சல்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது சொந்த கிராமத்தில் விருதாச்சலம் -திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் மெத்தை வீடு உள்ளது. இந்த வீட்டை வேலையாட்கள் மூலம் பராமரித்து வருகிறார். சிசிடிவி கேமரா மூலம் சிங்கப்பூரிலிருந்து அன்றாட நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் பின்புறம் சுவற்றில் துளையிட்டு வெளிநாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொரு ட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கை உறைகளும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவில் பதிவு எந்திரத்தையும் கழட்டி திருடி சென்று விட்டனர்.

    அந்த வீட்டில் எவ்வளவு ரூபாய், எவ்வளவு தங்க நகை, திருடு போனது என சிங்கப்பூரில் உள்ள வீட்டின் உரிமையாளர் வந்தால் மட்டுமே தெரியும் இது குறித்து ஆவினன்குடி காவல்துறை , திட்டக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாது காப்பு பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று தடயவியல் நிபுணர், மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டத்தின் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகம் மக்கள் நெருக்கம், மக்கள் நடமாட்டம் உள்ள விருத்தாசலம் -திட்டக்குடி சாலையில் சுவற்றின் துளையிட்டு உள்ளே புகுந்து திருடி இருப்பது கிராம பகுதியில் உள்ளவர்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி சாரணர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜீவிதா (28). மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணிகண்டன் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். ஜீவிதா வீட்டில் குழந்தைகளுடன் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு திங்களூர் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த உறவினர் குருமூர்த்தி (32) என்பவர் திடீரென வந்தார்.

    பின்னர் குருமூர்த்தி திடீரென ஜீவிதாவின் கழுத்தை பிடித்து கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி ஜீவிதாவை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்து அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டார்.

    வலி தாங்க முடியாமல் ஜீவிதா அலற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் குருமூர்த்தி தாக்கினார். இதைனயடுத்து பொது மக்கள் ஒன்று சேர்ந்து குர்மூர்த்தியை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குருமூர்த்தியை பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். 

    • சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புலி பற்கள், எழும்புகள் பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் வன அலுவலர்கள் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அேத பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
    • பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் கம்பிளியம் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). இவரது மனைவி செல்வி. இவர் விஜயமங்கலம் பகுதியில் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    கடந்த வாரம் தனது மகள் நந்தினிக்கு திருமணம் முடித்து மாப்பிள்ளை வீடான மலையம் பாளைய த்திற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு மலையம்பாளையம் சென்று விட்டனர்.

    பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து சம்பவம் குறித்து பழனிச்சாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×