search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people were arrested for"

    • ணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.
    • ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னியம்பாளையம் டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் பவானி சின்னியம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் மோகன் (40), ராமசாமி மகன் தர்மன் (40), சின்னுசாமி மகன் அய்யாசாமி (28), செல்வன் மகன் அய்யாதுரை மற்றும் சின்னுசாமி மகன் விஜயகுமார் (78) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டு மூலம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    • சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மது விற்று கொண்டிருந்த ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் உக்கரம் வாய்கால் கரை அருகே சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போ து அங்கு இருசக்கர வாகனத்தில் மது விற்று கொண்டிருந்த உக்கரம் பகுதியை சேர்ந்த ராமசாமியை (வயது 65) போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறி முதல் செய்த இன்ஸ்பெக்டர் துரைபாண்டி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் முருகம்பட்டியை சேர்ந்த வீரபாண்டியன் (42) என்பவர் பெருந்துறை பகு தியில் அரசு மதுபானங்களை விற்று கொண்டிரு ந்தார்.

    தகவலறிந்த பெரு ந்துறை போலீசார் வீரபா ண்டியனை கைது செய்து அவரிடமிருந்த 6 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதி யை சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார்.

    தகவலறிந்த பவானிசாகர் போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜூ (31). இவர் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் அருகே மது விற்று கொண்டிருந்தாக ஈரோடு தெற்கு போலீசார் பாண்டியராைஜ கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த குமார் (62) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார். தகவலறிந்த கவுந்தபாடி போலீசார் குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை-காங்கே யம் சாலையில் ஈ.சி.ஆர் நகரை சேர்ந்த தண்டபாணி (40) என்பவர் போதை பொருட்களை விற்றதாக சென்னிமலை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் தண்டபாணியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஜம்பை, கருக்கு பாளையம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜம்பையில் இருந்து கருக்கு பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அதில் கோபி சிறுவலூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 38), கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் கோகுல்நாத் (32), பவானி தொட்டிபாளையம் செந்தில்குமார் (43), புன்னம் பிரகாஷ், மங்கலேஷ் என 5 பேர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
    • இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி (52), கணேசன் (31), ஒட்டபாளையம் அய்யண்ணார் (48), முனுசாமி (52), கண்ணையன் (48) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.530 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    • சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புலி பற்கள், எழும்புகள் பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் வன அலுவலர்கள் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அேத பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×