search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gambling with roosters"

    • சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஜம்பை, கருக்கு பாளையம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜம்பையில் இருந்து கருக்கு பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அதில் கோபி சிறுவலூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 38), கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் கோகுல்நாத் (32), பவானி தொட்டிபாளையம் செந்தில்குமார் (43), புன்னம் பிரகாஷ், மங்கலேஷ் என 5 பேர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×