search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 5 பேர் கைது
    X

    மது விற்ற 5 பேர் கைது

    • சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மது விற்று கொண்டிருந்த ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் உக்கரம் வாய்கால் கரை அருகே சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போ து அங்கு இருசக்கர வாகனத்தில் மது விற்று கொண்டிருந்த உக்கரம் பகுதியை சேர்ந்த ராமசாமியை (வயது 65) போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறி முதல் செய்த இன்ஸ்பெக்டர் துரைபாண்டி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் முருகம்பட்டியை சேர்ந்த வீரபாண்டியன் (42) என்பவர் பெருந்துறை பகு தியில் அரசு மதுபானங்களை விற்று கொண்டிரு ந்தார்.

    தகவலறிந்த பெரு ந்துறை போலீசார் வீரபா ண்டியனை கைது செய்து அவரிடமிருந்த 6 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதி யை சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார்.

    தகவலறிந்த பவானிசாகர் போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜூ (31). இவர் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் அருகே மது விற்று கொண்டிருந்தாக ஈரோடு தெற்கு போலீசார் பாண்டியராைஜ கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த குமார் (62) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார். தகவலறிந்த கவுந்தபாடி போலீசார் குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை-காங்கே யம் சாலையில் ஈ.சி.ஆர் நகரை சேர்ந்த தண்டபாணி (40) என்பவர் போதை பொருட்களை விற்றதாக சென்னிமலை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் தண்டபாணியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×