search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel-cash"

    • சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
    • பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் கம்பிளியம் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). இவரது மனைவி செல்வி. இவர் விஜயமங்கலம் பகுதியில் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    கடந்த வாரம் தனது மகள் நந்தினிக்கு திருமணம் முடித்து மாப்பிள்ளை வீடான மலையம் பாளைய த்திற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று மலையம்பாளையத்தில் சம்மந்தி விருந்து நடந்ததால் பழனிச்சாமியும் அவர் மனைவி செல்வியும் வீட்டை பூட்டிவிட்டு மலையம்பாளையம் சென்று விட்டனர்.

    பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து சம்பவம் குறித்து பழனிச்சாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • தொழிலாளி குடும்பத்துடன் உறவினரை பார்க்க வெளியூர் சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
    • பீரோ உடைக்கப்பட்டு 2 பவுன் நெக்லஸ், 25 கிராம் கம்மல், வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது39). தொழிலாளி.

    இவர் குடும்பத்துடன் உறவினரை பார்க்க வெளியூர் சென்றுவிட்டார்.

    நேற்று மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நெக்லஸ், 25 கிராம் கம்மல், வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர்கள் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு பார்ைவயிட்டு கொள்ளையில் ஈடுபட்டவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×