search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில்  பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

    • வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
    • அதிகாரிகள் நடவடிக்கை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கழனிவாசல் கிராமத்தில் சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசி 2 இடங்களில் உள்ள வீடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக பொது மக்கள் குன்னம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் மற்றும் தனி வருவாய் அலுவலர் ஏகாம்பரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி அல்லி நகரம் அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? ரேஷன் அரிசியை எவ்வாறு இவ்விடத்தில் கடத்தி வந்தனர் என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×