search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழியாறு அருகே 1½ வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்
    X

    ஆழியாறு அருகே 1½ வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
    • இது குறித்து கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளக்குறிச்சியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 1 ½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இளம் பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது 1 ½ வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு திரும்பிய கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 1 ½ வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×