search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife"

    • மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
    • அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு :

    'காதல்' என்ற வார்த்தையை வர்ணிக்க முடியாது என்பார்கள் கவிஞர்கள். அதுபோல் காதலை மையமாக வைத்து வந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவிஞர்கள் பெருமாலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டான காதலை மையப்படுத்தியே கவிதைகள், பாடல்கள் எழுதுவார்கள். அக்காலத்தில் காதல் ஒரு ஊரிலோ அல்லது கிராமத்திலோ தான் இருக்கும்.

    ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசி பழகி பின்னர் திருமணம் பந்தத்தில் இணைவார்கள். பல காதல்கள் பெற்றோர் எதிர்ப்பு, சாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்ததும் உண்டு. அது இன்றளவும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது காதல் கடல் கடந்து கணினி, செல்போன் வாயிலாக காற்றில் பறந்து காதலர்களிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.

    காதல் என்பது பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், வேலையில்லாதவர்கள் செய்யும் வேலை என்று கூறி பலர் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையும் மீறி காதலர்கள் தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் காதலில் மட்டுமல்லாது பல எதிர்ப்புகளை மீறி திருமணம் புரிந்து வாழ்விலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.

    அதாவது அந்த இளம்பெண் தனது கணவரின் பெயரான 'சதீஷ்' என்ற பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்.

    அந்த புகப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சிலர் 'இதுதான் உண்மையான காதல்' என்றும், சிலர் 'இது ஓவர் ஆக்டிங்' என்றும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த கருத்துகளுக்கு இளம்பெண் பதில் ஏதும் கூறவில்லை. தனது கணவர் மீதான அதீத அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவே தான் இதுபோன்று செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
    • கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராம் குழிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (65) விவசாயி, இந்த நிலையில் இவரது வீடு அருகே பக்கத்து வீட்டில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா, லட்சுமி என்ற தம்பதிகள் கடந்த ஆறு மாத காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந்தேதி அன்று அவசரமாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டி இருப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டியை வைத்துக்கொண்டு, ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சின்னச்சாமியை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சை நம்பி அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ரூ 1.40 லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு, ஊருக்குச் சென்று விட்டு ஒரு வார காலத்தில் திரும்பி வருவதாக சென்ற அவர்கள், கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து, சின்னச்சாமி அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ன வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை ஏமாற்றியது குறித்து காமநாயக்கன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கக் கட்டி என மோசடி செய்த அந்த தம்பதிகளை வீசி தேடி வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார்.
    • சிவஞானசுந்தரம் தங்கியிருந்த அறையில் துர்நாற்றம் வீசியது.

    திருப்பூர் :

    திருப்பூர், காந்தி நகர், லட்சுமி தியேட்டர் ரோடுபகுதியை சேர்ந்தவர் சிவஞான சுந்தரம், ( வயது 50). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார். இதனால் ஆசிரியர் சிவஞானசுந்தரம் மட்டும் தனியாக தங்கி இருந்து பள்ளிக்கு சென்று இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று துர்நாற்றம் வீசியது.இது குறித்து அக்கம் பக்கத்தினர் வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்துபார்த்த போது அங்கு ஆசிரியர் சிவஞானசுந்தரம் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதிவைக்கப்பட்டிருந்து. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
    • வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

    இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • சதீஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத போது தேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூர் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவருடைய மனைவி தேவி (வயது 30). இவர்களுக்கு 11 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சதீசும் அவரது மனைவி தேவியும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஒப்பந்த அடிப்படையில் தையல் எந்திரங்கள் போட்டு கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் சதீஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தேவி தனது துப்பட்டாவால் வீட்டுக்குள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் தேவியின் தந்தை வேலுச்சாமி வீட்டுக்கு விரைந்து வந்தார்.

    பின்னர் இது குறித்து வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    • 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.
    • மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் குருவை தட்டி கேட்டார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில் குரு மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவரை மொபட் மீது டிராக்டர் மோதி கணவன் பலி; மனைவி படுகாயமடைந்தனர்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் ( வயது 65) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி (60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மொபட்டில் பொம்மம்பட்டிக்கு சென்றுள்ளனர்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பொம்மம்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். அல்லாளபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே அல்லாளபுரத்தில் இருந்து பொம்மம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர், ஜெயராஜ், சுமதி தம்பதி சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரான வேலகவுண்டம்பட்டி அருகே சிலுவம்பட்டியைச் சேர்ந்த தமிழரசனை(50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார்.
    • அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்

    மதுரை

    மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.

    மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.

    இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.

    எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.
    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டி சின்ன ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பூபாலன் (வயது 35). இவர் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.

    தர்ஷித் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    மகனின் போட்டோவை எடுக்காமல் வந்து விட்ட தால், மீண்டும் வீட்டுக்கு சென்ற பூபாலன் போட்டோவை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். அப்போது, பள்ளியில் விட்டுச் சென்ற மனைவி நித்யா, குழந்தைகள் தர்ஷித், ஷிவானி ஆகியோரை காணவில்லை. இதையடுத்து அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன், இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன் என மாமனாரை கொன்ற வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
    • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் எப்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது52). இவரது மகள் நாகரத்தினம். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆத்விக் என்ற மகன் உள்ளான்.

    கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நாகரத்தினம் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். பிரபாகரன் பலமுறை சமரசம் பேசியும் நாகரத்தினம் வர முடியாது என கூறிவிட்டார். மேலும் விவாகரத்து வழக்கும் நாகரத்தினம் சார்பில் தொடரப்பட்டது.

    இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனது மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையறிந்த பிரபாகரன் மாமனார் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பிரபாகரன் உள்பட 4 பேர் அரிவாளால் பாலசுப்பிரமணியனை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், நாகரத்தினமும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காமல் மாமனார் பாலசுப்பிரமணியன் மறுமணம் வைத்து வைக்க முயற்சி செய்தார்.

    பலமுறை சமரசம் பேசியும் எங்களை பிரித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதனால் மாமனாரை கொலை செய்தேன் என பிரபாகரன் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பின்னர் முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், அவரது மனைவி சங்கீதா. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கீதாவின் தாயார் சரோஜா விஷம் குடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி உடலில் தீக்காயங்களுடன் சங்கீதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேற்று முதல் சமூக வளைதளங்களில் சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவர் முத்துக்குமரன் தன்னை வரதட்சனை வாங்கி வரச் சொல்லி கொடுமைப் படுத்தியதாகவும், முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும், இதனை வெளியில் கூறினால் உனது பிள்ளைகளையும் மண்ணெண்ணைய் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டியதால், என்மீது யாரும் மண்ணைண்ணைய் ஊற்றி கொளுத்தவில்லை. தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்தாகவும் கூறியுள்ளார்.

    தனது உறவினர்கள் தன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் இப்போது இந்த உண்மையை கூறுவதாகவும் இந்த வீடியோவில் சங்கீதா கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சங்கீதா உயிரிழந்தார்.

    இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தீக்குளிக்க முயன்ற மனைவி மீது கணவனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×