search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Children"

    • மதுரை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பா ண்டி கா ம்பவு ண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவ ரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் சண்முகபாண்டி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.
    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டி சின்ன ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பூபாலன் (வயது 35). இவர் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.

    தர்ஷித் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    மகனின் போட்டோவை எடுக்காமல் வந்து விட்ட தால், மீண்டும் வீட்டுக்கு சென்ற பூபாலன் போட்டோவை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். அப்போது, பள்ளியில் விட்டுச் சென்ற மனைவி நித்யா, குழந்தைகள் தர்ஷித், ஷிவானி ஆகியோரை காணவில்லை. இதையடுத்து அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன், இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.
    • இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஈரோடு, ஆக. 21-

    ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் விடுமுறையின்போது ஈரோட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் கடந்த 12-ந் தேதி இரவு பிரகாஷ் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஈரோட்டுக்கு வந்தார்.

    அவர் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்ததால், அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவர் பெரியார்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் 5 பேர் நின்றிருந்தனர்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.

    அந்த பையில் லேப்டாப், செல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பிரகாஷ் வைத்து இருந்தார்.

    இதுகுறித்து பிரகாஷ் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஏட்டுகள் தனசேகர், கோபி, போலீஸ்காரர்கள் அருண்குமார், வேலுமணி, திருமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டன.அவர்கள் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தீவிர படுத்தினார்.

    போலீசார் விசாரணையில், பிரகாஷிடம் இருந்து பையை திருடி சென்றது ஈரோடு நேதாஜிரோடு ஆலமரத்து தெருவை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மனோ (வயது 21), ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஸ் (20), ஈரோடு தீரன்சின்னமலை வீதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கோவையில் உள்ள சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Jharkhand #FamilySuicide
    ராஞ்சி:

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்தில் உள்ள போடோம் பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர். இவர்களில் 3 பேர் வீட்டின் உள்ள அறையில் தூக்குப்போட்டும், அடுத்த பிளாட்டில் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்திலும் பிணமாக கிடந்தனர். 6-வது நபர் மாடியில் இருந்து குதித்தும் உயிரை மாய்த்து உள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ‘6 பேர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர்கள் நடத்திய மளிகைக்கடையில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது’ என்றார்.   #Jharkhand #FamilySuicide  #tamilnews
    ×