search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were jailed"

    • நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் பணியாற்றுபவர் அரச்சலூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (29).

    இவர் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்று நகைகடன் தொடர்பாக நோட்டீஸ் வழங்கி அதன் மூலமாக தொடர்பு கொள்ளும் பொதுமக்களின் ஏலத்திற்கு போகும் நகைகளை பணம் வழங்கி மீட்டு இவர் பணியாற்றும் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் பெரு ந்துறையை அடுத்துள்ள வீரணம் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செங்காவேரிக்கு வங்கியில் நகை அடமான கடன் பெற்று வழங்கியதன் மூலமாக செங்காவேரிக்கு நடராஜ் நன்கு பழக்கமானார்.

    நாள் பட்ட தொடர் நட்பின் மூலமாக நடராஜ் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பணம் கையில் வைத்து உள்ளார் என்பதை நன்கு அறிந்து வைத்த செங்காவேரி நடராஜ்க்கு முன்பாகவே வேறு வேலைக்கு திருப்பூர் சென்று வரும் போது திருப்பூரை சேர்ந்த ரத்தீஸ் குமார் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இதன் மூலமாக நடராஜிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட செங்கா வேரி நண்பர் ரத்தீஸ்குமார் மூலமாக நடராஜை தொடர்பு கொண்டு 30 பவுன் தங்க நகை அடமானம் வைத்து ள்ளதாகவும், தற்போது நகையை வங்கி அதிகாரிகள் ஏலம் விட போவதாக கூறி உள்ளதா கவும், தங்களது வங்கியில் எனது 30 பவுன் தங்க நகையை அடமானம் வைக்க உள்ளதாகவும் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய நடராஜ் ரத்தீஸ்குமாரி டம் எங்கு வர வேண்டும், எவ்வளவு பவுன் நகை, எப்போது எந்த வங்கியில், எவ்வளவு பணத்திற்கு அடமானம் வைக்கபட்டது என்ற விபரங்களை கேட்டு கொண்டு ரத்தீஸ்குமார் சொன்ன தகவலின் படி தான் பணியாற்றும் வங்கியில் இருந்து ரூ.1.10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ரத்தீஸ்குமாரை தொடர்பு கொண்டு நடராஜ் எங்கு வர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

    பெருந்துறை அடுத்துள்ள பொன்முடி பகுதியில் இருப்பதாக ரத்தீஸ்குமார் கூறியதை நம்பி நடராஜ் பணத்துடன் அங்கு சென்றுள்ளார். திருப்பூரை சேர்ந்த நண்பர் ஒருவரின் காரை எடுத்து வந்த ரத்தீஸ் குமார் தனது நண்பர்களான சரன் நித்தி, மணிகண்டன், சரத் ஆகியோருடன் காரில் காத்திருந்தனர். நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக பொதுமக்கள் உதவியு டன் நடராஜ் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் கார் சென்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரு நபரின் கார் என்றும், நண்பர்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் வாடகைக்கு டிரைவர் இல்லாது வழங்கியது தெரியவந்தது.

    இந்த கார் உரிமையாளர் மூலமாக காரை வாடகைக்கு எடுத்து சென்றவர்களை பிடித்து பெருந்துறை ேபாலீசார் தீவிர விசாரணை மேற்கொ ண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது செங்காவேரி என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செங்காவேரி, ரத்தீஸ்குமார், சரன் நித்தி, மணிகண்டன் ஆகிய 4 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்காவேரியை கோவை சிறையிலும், மற்ற 3 பேரை மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனை யடுத்து கார் மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் பெருந்து றை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.
    • இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஈரோடு, ஆக. 21-

    ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் விடுமுறையின்போது ஈரோட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் கடந்த 12-ந் தேதி இரவு பிரகாஷ் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஈரோட்டுக்கு வந்தார்.

    அவர் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்ததால், அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவர் பெரியார்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் 5 பேர் நின்றிருந்தனர்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.

    அந்த பையில் லேப்டாப், செல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பிரகாஷ் வைத்து இருந்தார்.

    இதுகுறித்து பிரகாஷ் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஏட்டுகள் தனசேகர், கோபி, போலீஸ்காரர்கள் அருண்குமார், வேலுமணி, திருமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டன.அவர்கள் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தீவிர படுத்தினார்.

    போலீசார் விசாரணையில், பிரகாஷிடம் இருந்து பையை திருடி சென்றது ஈரோடு நேதாஜிரோடு ஆலமரத்து தெருவை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மனோ (வயது 21), ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஸ் (20), ஈரோடு தீரன்சின்னமலை வீதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கோவையில் உள்ள சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×