search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Four people"

    • நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் பணியாற்றுபவர் அரச்சலூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (29).

    இவர் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்று நகைகடன் தொடர்பாக நோட்டீஸ் வழங்கி அதன் மூலமாக தொடர்பு கொள்ளும் பொதுமக்களின் ஏலத்திற்கு போகும் நகைகளை பணம் வழங்கி மீட்டு இவர் பணியாற்றும் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் பெரு ந்துறையை அடுத்துள்ள வீரணம் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செங்காவேரிக்கு வங்கியில் நகை அடமான கடன் பெற்று வழங்கியதன் மூலமாக செங்காவேரிக்கு நடராஜ் நன்கு பழக்கமானார்.

    நாள் பட்ட தொடர் நட்பின் மூலமாக நடராஜ் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பணம் கையில் வைத்து உள்ளார் என்பதை நன்கு அறிந்து வைத்த செங்காவேரி நடராஜ்க்கு முன்பாகவே வேறு வேலைக்கு திருப்பூர் சென்று வரும் போது திருப்பூரை சேர்ந்த ரத்தீஸ் குமார் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இதன் மூலமாக நடராஜிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட செங்கா வேரி நண்பர் ரத்தீஸ்குமார் மூலமாக நடராஜை தொடர்பு கொண்டு 30 பவுன் தங்க நகை அடமானம் வைத்து ள்ளதாகவும், தற்போது நகையை வங்கி அதிகாரிகள் ஏலம் விட போவதாக கூறி உள்ளதா கவும், தங்களது வங்கியில் எனது 30 பவுன் தங்க நகையை அடமானம் வைக்க உள்ளதாகவும் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய நடராஜ் ரத்தீஸ்குமாரி டம் எங்கு வர வேண்டும், எவ்வளவு பவுன் நகை, எப்போது எந்த வங்கியில், எவ்வளவு பணத்திற்கு அடமானம் வைக்கபட்டது என்ற விபரங்களை கேட்டு கொண்டு ரத்தீஸ்குமார் சொன்ன தகவலின் படி தான் பணியாற்றும் வங்கியில் இருந்து ரூ.1.10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ரத்தீஸ்குமாரை தொடர்பு கொண்டு நடராஜ் எங்கு வர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

    பெருந்துறை அடுத்துள்ள பொன்முடி பகுதியில் இருப்பதாக ரத்தீஸ்குமார் கூறியதை நம்பி நடராஜ் பணத்துடன் அங்கு சென்றுள்ளார். திருப்பூரை சேர்ந்த நண்பர் ஒருவரின் காரை எடுத்து வந்த ரத்தீஸ் குமார் தனது நண்பர்களான சரன் நித்தி, மணிகண்டன், சரத் ஆகியோருடன் காரில் காத்திருந்தனர். நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக பொதுமக்கள் உதவியு டன் நடராஜ் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் கார் சென்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரு நபரின் கார் என்றும், நண்பர்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் வாடகைக்கு டிரைவர் இல்லாது வழங்கியது தெரியவந்தது.

    இந்த கார் உரிமையாளர் மூலமாக காரை வாடகைக்கு எடுத்து சென்றவர்களை பிடித்து பெருந்துறை ேபாலீசார் தீவிர விசாரணை மேற்கொ ண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது செங்காவேரி என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செங்காவேரி, ரத்தீஸ்குமார், சரன் நித்தி, மணிகண்டன் ஆகிய 4 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்காவேரியை கோவை சிறையிலும், மற்ற 3 பேரை மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனை யடுத்து கார் மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் பெருந்து றை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேரளம் பகுதியில் போதை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம், கீரனூர், கொல்லுமாங்குடி, கோவில்திருமாளம், இஞ்சிக்குடி உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அப்பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனையிட்டனர். இதில் கீரனூரை சேர்ந்த கார்த்தி (வயது32), கொல்லுமாங்குடியை சேர்ந்த காதர் (27), கோவில்திருமாளத்தை சேர்ந்த சசிகுமார் (45), இஞ்சிக்குடியை சேர்ந்த சம்பந்தம் (70) ஆகியோர் தங்களுடைய கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, காதர், சசிகுமார், சம்பந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். 
    நிலம் கொடுத்த தங்களுக்கு பெல் நிறுவனம் வேலை வழங்காததால் விரக்தியடைந்த 4 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #DemandJob
    சிப்காட்:

    ராணிப்பேட்டையில் பெல் நிறுவனம் தொடங்க நிலம் கொடுத்த பலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்கியது. சிலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி வேலை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெல் நிறுவனம் நிலம் கொடுத்தவர்களில் 109 பேருக்கு வேலை கொடுத்தது. மற்ற 15 பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு படிக்கவில்லை என கூறி அவர்களுக்கு பெல் நிறுவனம் வேலை தரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிப்காட் பகுதியை சேர்ந்த பாலு (வயது 40), லாலாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (48), சம்பத் (40), புளியந்தாங்கலை சேர்ந்த முனிசாமி (44) ஆகிய 4 பேரும் நேற்று காலை சுமார் 8 மணிஅளவில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி, மண்எண்ணெய் மற்றும் விஷ பாட்டிலுடன், கழுத்தில் பச்சை துண்டு அணிந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த மற்றவர்கள் கீழே நின்று கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவரின் மீது ஏறியவர்களை கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கியில் பேசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் உடன்படவில்லை.

    இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வைத்திருந்த செல்போன் மூலம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பி.ஏ.பி. இ.ஜி.டி.யூ. ஐ.என். டி.யூ.சி.சங்க பொதுச்செயலாளர் கணேஷ், துணைத்தலைவர் தண்டபாணி, பி.ஏ.பி.எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் சிவகுமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி கீழே இறங்கி வர வேண்டு கோள் விடுத்தனர்.

    இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை கீழே இறங்கி வரக் கூறி தொடர்ந்து வற்புறுத்தினால் தாங்கள் எடுத்து வந்துள்ள மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.

    பின்னர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர், நிலம் கொடுத்து வேலை கிடைக்காதோர் அமைப்பை சேர்ந்த முரளி உள்பட மற்றவர்களும் சேர்ந்து கண்ணீர் மல்க கீழே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது உதவி கலெக்டர், தாசில்தார், போலீசார், தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 12 மணி அளவில் செல்போன் டவரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கீழே இறங்கி வந்தனர்.

    அவர்களில் முனிசாமி கூறுகையில், “நாங்கள் நிலம் கொடுத்து விட்டு வேலை வழங்கக்கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம். கல்வித்தகுதியை காரணம் காட்டி எங்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியை பாஸ் செய்து விட்டோம். எங்களுக்கு வேலை வேண்டும் அல்லது எங்களது நிலத்தை திருப்பி தர வேண்டும். வேலை தராவிட்டால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.

    பின்னர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், வேலை கிடைக்காத மற்றவர்களிடமும் உதவி கலெக்டர் வேணுசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகலில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உதவி கலெக்டர் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 4 மணி நேரமாக நீடித்த இந்த தற்கொலை மிரட்டல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் ஏறிய செல்போன் டவர் தற்போது உபயோகத்தில் இல்லை என கூறப்படுகிறது. 
    கரூர் அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய முதல் மனைவி கிரேசி ஜெயலட்சுமி (55), 2-வது மனைவி சுப்புலட்சுமி (53), டிரைவர் முனியாண்டி (65). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    கரூர் அருகே சின்னதாராபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் செல்வராஜூம், முனியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிய கிரேசி ஜெயலட்சுமியையும், சுப்புலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பலியான செல்வராஜ் கிராமப்புற வளர்ச்சி துறை இணை இயக்குனராகவும், முனியாண்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார் டிரைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×