search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water shortage"

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
    • காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.

    மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் ஜெபதாஸ், ஜே. டில்லி பாபு, சர்மிளா, காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. முக்கிய ரெயில்வே சந்திப்பு, மாவட்ட அரசு தலைைம ஆஸ்பத்திரி, ஏராளமான பள்ளி-கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பழவேலி நீர் ஏற்றும் தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாததை கண்டித்தும் செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரும் 9-வார்டு கவுன்சிலருமான தமிழரசன் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகையுடன் அமர்ந்து இருந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் தமிழரசன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெங்களூருவில் நாளுக்கு, நாள் நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
    • வீடுகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம் உள்பட பல்வேறு புனைப்பெயர்களால் பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் குவிந்து கிடக்கும் தொழில்களால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் நாளுக்கு, நாள் நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதன்காரணமாக நகரில் வீடுகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அந்த வீடுகளுக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் காவிரி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1,470 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு நகரில் 10½ லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் 2039-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெங்களூரு நகரில் தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளிமாநில கூலி தொழிலாளர்கள் வீடுகள் அமைத்து வருகின்றனர். நகரில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29 லட்சத்து 5 ஆயிரத்து 233 வீடுகள் இருந்தன. தற்போது வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நகர மக்களுக்கு தினமும் 2,100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

    தண்ணீர் கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் வருகிற 2030-ம் ஆண்டே பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கும். 2039-ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போது பெங்களூருவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள 110 கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகிக்க வேண்டி உள்ளது.

    இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 65 சதவீதம் முடிந்து உள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணி முடிவடையும்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீராணம் ஏரி மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகின்றன. ஆனால், தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

    நகருக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

    இதில் நெமிலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு திட்டத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.

    இந்த நிலையில் சிறிய அளவிலான கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்ட மிட்டு இருக்கிறது. காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக் கேணி, எம்.ஆர்.சி. நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையையொட்டி உள்ள 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    6 மாதத்துக்குள் இந்த 5 நிலையங்களை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சிறிய அளவிலான 5 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் தலா ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லாததால் தற்போது சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

    இதற்காக நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்ட பகுதிகளை தேர்வு செய்து இருக்கிறோம். 5 சுத்திகரிப்பு நிலையம் மூலம் 5 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும்.

    இந்த சிறிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க பெரிய அளவிலான இடங்கள் தேவை இல்லை. சிறிய இடத்திலேயே அமைத்துவிடலாம். இதற்கு அனுமதி பெறுவதும் எளிதானது.

    இந்த குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பைப்புகள் மூலம் தண்ணீரை அருகில் உள்ள குடிநீர் விநியோகிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்படுகிறது என்றார்.

    இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில சுற்றுச்சூழல் கழகம், கடலோர ஒழுங்கு முறை அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.

    சேலம் மாவட்டத்தில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
    ஆத்தூர்:

    செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். நகரம் முதல் கிராமம் வரை செல்போன் பரவி கிடக்கிறது. இதில் ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துபவர்கள் தினமும் மெசேஜ், புகைப்படங்கள் அனுப்பிக் கொள்வது, ‘வாட்ஸ்அப்’ குரூப்பில் உரையாடுவது என மணிக்கணக்கில் நேரங்களை செலவிடுகின்றனர்.

    இந்த நிலையில் தண்ணீர் அஞ்சலி என விளம்பர போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை நீடிக்கிறது.

    இதனால் வெறுப்படைந்த, யாரோ ‘வாட்ஸ்அப்’பில் தண்ணீர் அஞ்சலி என போஸ்டர் தயார் செய்து உலா விட்டுள்ளனர். அதில், 2 கண்களில் இருந்து கண்ணீர் சிந்துவது, அதன் கீழ் தோற்றம் (ஆதி), நடுவில் குடிநீர் குழாய், மறைவு 2050 (ஆரம்பம்) என சித்தரித்துள்ளனர்.

    இதை தவிர கவிதை ஒன்றையும் எழுதியுள்ளனர். நீ(ர்) அழுதாலும், கண் (நீர்) வருவதில்லை. காரணம் மனிதன் தான் என்பது அவனுக்கும் புரியவில்லை. நீ(ர்) இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை. நீ(ர்) மறைந்தால் மனிதகுலமே இல்லை. நீ(ர்) இன்றி தவிக்கப்போகும் உயிருக்கும், உலகிற்கும் எங்களது பணிவான கண்ணீர் அஞ்சலி என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    இந்த போஸ்டரின் கடைசியில், மகன்கள் மரம், மலை, அணை, கணவன் காற்று, மகள்கள் குளம், ஏரி நதி என எழுதியுள்ளனர். இது செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது.
    தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ‘ஷவர்பாத்தில்’ குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி, புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

    இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.



    வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர். அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

    ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.

    சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.

    வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பழவேற்காடு பகுதியில் ரஜினி ரசிகர்கள் வாகனங்களில் குடிநீர் கொண்டுவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
    பொன்னேரி:

    பழவேற்காட்டில் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மெதூர் கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் வாரம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வருவாய் இன்றி தவித்து வரும் மீனவ குடும்பத்தினர் தற்போது குடிநீருக்காக மட்டும் நாளொன்றுக்கு 100 ரூபாய் வரை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசிகள் தடையில்லா குடிநீர் வழங்கக்கோரி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அறிந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பழவேற்காடு மக்களுக்கு குடிநீர் வழங்க அவரது மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து தற்போது பழவேற்காடு பகுதியில் ரஜினி ரசிகர்கள் வாகனங்களில் குடிநீர் கொண்டுவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். இதேபோன்று மற்ற பகுதிகளிலும் குடிநீர் வழங்கப்படும் என ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ளது பெரியகோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 3 ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை மோட்டார் பழுதாகியது.

    மேலும் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு தொட்டியும் தற்போது செயல்படவில்லை. இதையடுத்து இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி இந்த கிராம மக்கள் தற்போது குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரவன்பட்டி பகுதிக்கு நடந்து சென்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இந்த அவல நிலையை போக்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பெரியகோட்டை கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #MaduraiHighCourt
    மதுரை:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். 2020-ம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போர்க்கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், “மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நம் நாட்டில் மக்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால், 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன யுத்திகளை மத்திய, மாநில அரசுகள் கையாள வேண்டும். செயற்கை மழைக்காக பல்வேறு நாடுகள் ஏராளமான நிதி செலவு செய்கின்றன. 1980-ம் ஆண்டில் தமிழகத்தில் செயற்கை மழை வரவழைக்க முயற்சி செய்யப்பட்டது“ என்றனர்.

    பின்னர் செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏன் முயற்சி செய்யக்கூடாது. குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலோர மாவட்டங்களில் உப்பு நீர் பாசனத்தை ஏன் ஏற்படுத்தவில்லை என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    பின்னர் விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHighCourt
    மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் தேனி, மதுரை மாவட்டத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால் பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த நிலை தொடர்ந்தால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 113.85 அடியாக குறைந்துள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்துள்ள நிலையில் 3 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

    அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

    இதனால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளும் வறண்டு போய் உள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வைகை அணை நீர் மட்டம் 44.93 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 95.94 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    வடகிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து இருக்கிறது. இதனால் வரக்கூடிய நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #Rain #Watershortage
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை ஆகும். ஓராண்டு மழைப்பொழிவில் 48 சதவீதத்தை இந்த பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தமிழகத்தை ஏமாற்றியது. இயல்பான அளவை விட 61 சதவீதம் குறைவாக மழை பெய்தது. கடந்த ஆண்டை (2017) பொறுத்தவரையில், 9 சதவீதம் தான் குறைவாக மழை பெய்து இருந்தது.

    இந்த ஆண்டை பொறுத்தவரையில், வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய மழை நவம்பர் 1-ந் தேதி தான் தொடங்கியது. இன்னும் 10 நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிந்து விடும்.

    இதுவரை சராசரி மழைப்பொழிவில் இருந்து 21 சதவீதம் குறைவாக மழை பெய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்னும் பெரிய அளவில் மழையை பெறவில்லை என்பதை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் (நேற்றைய நிலவரப்படி) சுட்டிக்காட்டுகின்றன.

    குறிப்பாக சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. சென்னையை எடுத்துக்கொண்டால், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 74 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 34 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 54 சதவீதம் குறைவு.

    இதேபோல், வேலூர், திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதம் மழை பெய்துள்ளது.

    சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் வெறும் 1.5 டி.எம்.சி. நீர் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 5 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அப்படி இருந்துமே கடந்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தற்போது இருக்கும் நீர் இருப்பை பார்க்கும்போது, வரக்கூடிய நாட்களில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. #Rain #Watershortage
    ×