search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பிரச்சினை"

    • விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரமும் கிடைக்க பெறும்.
    • புல அள வீட்டுப் புத்தகத்தின் அடிப்படையில் அளவீடு செய்து பழையாற்றின் எல்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், 

    நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பழையாற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வறிக்கை யினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தின் பழம் பெருமை வாய்ந்த பழை யாற்றின் அமைப்பினை மீட்டு எடுக்க வேண்டும். பழையாறு மீட்ெடடுக்கும் முன்னெடுப்பில் மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதலின்படி பலருடைய பங்களிப்புடன் புல அள வீட்டுப் புத்தகத்தின் அடிப்படையில் அளவீடு செய்து பழையாற்றின் எல்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் நதியைக் கள ஆய்வு செய்து நதியின் தற்போதைய நிலை மற்றும் நதி சந்திக்கும் சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.டி.பி.ஜி.எஸ். தொழில் நுட்பம் மூலம் புவியியல் தகவல் அமைப்பை ஆய்வு செய்து துல்லியமாக நதியின் டிஜிட்டல் வரை படம் உருவாக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நதிகளை சீரமைப்பதன் வாயிலாக நமது மாவட்டத் தின் பழமையை மீட்டெ டுப்பது மட்டு மல்லாமல், விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரமும் கிடைக்க பெறும். மேலும் குடிநீர் ஆதாரத்திற்கும் வழி வகுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில மெடுப்பு) ரேவதி, பொறி யியல் கல்லூரி முதல்வர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முல்லை பெரியாறு அணை மூலம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்.
    • கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கிணங்க ராமநாத புரம் கிழக்கு மாவட்ட பாட் டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கிம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலா ளர் வெங்கடேசன் வரவேற் றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், ராமநாதபுரம் ஒன் றிய செயலாளர் பொறியா ளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், திருப்புல்லா ணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், இளைஞர் சங்க செய லாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி

    ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்கர் செயலாளர் சந்தோ சம், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் மற்றும் நிர்வாகி கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல் லாமல் கடன் வாங்கிய நபர்களின் வாகனங்களை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வது குண்டர் களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்கள் அதி கமாகி வருகிறது. இவை அனைத்தையும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து கட்டுப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாரதி நகரில் இயங்கி வரும் தனியார் நிறு வனத்தின் முன்பு வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்,

    தினம் தினம் இலங்கை ராணுவத்தினரால் கட லுக்குச் சென்று வீட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறி யாக சென்று வரும் தமிழக மற்றும் குறிப்பாக ராமேசுவ ரம் மீனவர்களின் உயிருக் கும் உடைமைகளுக் கும் மத்திய அரசு பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவா தம் வழங்க வேண்டும் ஒரு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட நிர் வாகத்தின் சார்பாக போராட்டம் நடத்த வேண்டும்,

    அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய அனைத்து நிர்வாகி களுக்கும் செயற்குழு கூட்டம் பாராட்டு, நன்றி, வாழ்த்துக் களை தெரிவிப்பது, விரை வில் சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றி யத்தை உருவாக்க வேண்டும் அதற்காக கடலாடி ஒன்றி யத்தின் சார்பாக விரைவில் ஒரு உண்ணா நிலை போ ராட்டம் நடத்த வேண்டும்,

    முல்லைப் பெரியாற்றிலி ருந்து நேரடியாக ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து கொண்டு வந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழு மையாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா நன்றி கூறினார்.

    • குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
    • அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

    விருதுநகர்

    காந்தி ஜெயந்தியை யொட்டி விருதுநகர் யூனியன் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வரதராஜ், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறியதுடன் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்றும் புகார் கூறினர்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

    மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. உறுதி அளித்தார். கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.பி. இதுகுறித்து பரிசீலித்து தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்வதாக தெரி வித்தார். முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்தநிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வைரவ சாமி, வக்கீல் சரவணன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாந கராட்சியின் 9-வது வார்டான உத்தங்குடி சாலை அம்பேத்கார் நகர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்ய வில்லை.

    இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை உத்தங்குடி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் வீட்டு இணைப்புகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது.
    • குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் வீட்டு இணைப்புகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் குடிநீர் சப்ளை அடியோடு முடங்கியது. ஆற்றில் நீர் வரத்து அறவே இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனிடையே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்தநிலையில் தான் இந்த பிரச்சினையை ஆறுமுகநேரி நகர பாரதிய ஜனதா கட்சியினர் கையில் எடுத்தனர். அவர்கள் குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஏன் முன்பே அறிவிக்கவில்லை என்றும் பிரசாரம் செய்து வந்தனர்.

    இதனிடையே தாமிரபரணி ஆறு வறண்டு போனதுதான் குடிநீர் வழங்கலில் ஏற்பட்ட தடங்கலுக்கு காரணம் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மாற்று ஏற்பாடாக பொது மக்களுக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரின் ஏற்பாட்டில் டேங்கர் லாரிகள் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பாபநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் 4 நாட்களுக்குப் பிறகு ஆறுமுகநேரி பேரூராட்சியில் மீண்டும் குடிநீர் வினியோகம் இயல்பு நிலைக்கு வந்தது. இதனிடையே பேரூராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத் தொகை நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருப்பதுதான் தற்போதைய குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என்று எதிர்தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டது.

    இதற்கு பதிலடியாக பேரூராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க நகர இளைஞரணி செயலாளருமான வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுகநேரி பேரூராட்சியில் 30 ஆண்டுகளாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணம் செலுத்தப்படாமல் ரூ.1 கோடியே 25 லட்சம் முன்பு நிலுவையில் இருந்து வந்தது. 2016-ம் ஆண்டில் பேரூராட்சி தலைவராக கல்யாணசுந்தரம் பொறுப்பேற்ற பிறகு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அந்த பாக்கி தொகை முழுவதும் செலுத்தப்பட்டு விட்டது. தற்போது பேரூராட்சி தலைவராக கலாவதி கல்யாணசுந்தரம் உள்ளார். இப்போது வரையில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பாக்கி தொகை எதுவும் நிலுவையில் இல்லை. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டண பாக்கி வைத்துள்ளது என்று தொடர்ந்து கூறி வருபவர்கள் அந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சமையல் செய்வதற்கு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்று மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுடன் இன்றுகாலை பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இறுதியாக ஒரு வழியாக பாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களை சந்தித்து ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் என உறுதி அளித்து சமாதானப்படுத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.
    • கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    இதனிடையே கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறந்திருக்கும் தண்ணீரை தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

    இதற்கிடையே ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகமாகியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 27.71 அடியாக பதிவானது. 1.271 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

    மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

    இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • வசந்திரமேஷ் 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது என கூறினார்.
    • குடி நீர், தெருவிளக்கு பிரச்சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும் என கூறினார்.


    பண்ருட்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணைத் தலைவர் சிவா,கமிஷனர்மகேஸ்வரிமுன்னிலைவகித்தனர். என்ஜினீயர் பவுல் செல்வம்,துப்புரவு அலுவலர் முருகேசன், மேலாளர் அசோக்குமார், மற்றும்கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட அஜெண்டாவை உதவியாளர்சோமசுந்தரம் படித்தார்.

    கூட்டத்தில் நடந்தவிவாதம் வருமாறு:- கிருஷ்ணராஜ் (வாழ்வுரிமை கட்சி): வார்டு பகுதியில் குடிநீர் இணைப்புகள் உடனே வழங்க வேண் டும். பொதுமக்கள் கடு மையாக அவதிப்பட்டு வருகின்றனர். வசந்திரமேஷ் (தி.மு.க): 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. மோகன் (அ.தி.மு.க): எனது வார்டில் உள்ள குறைகளைசரி செய்யக்கோரி கொடுத்த மனு க்கள் என்ன ஆனது.ஆதி திராவிட மக்கள் வசிக்கும் நந்தனார் காலணியில் 3சாலைகள் உள்ளன. அதில் ஒன்று மண்சாலையாக உள்ளது. ஒன்று நடக்க கூட முடியாத அளவுக்கு உள்ளது உடனே சரி செய்ய வேண்டும் .

    ராமலிங்கம் (தி.மு.க.): கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்றுபண்ருட்டி நகரில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட பன்றி களைபிடித்து வனப்பகுதியில் விட்டதற்கு நன்றி. சோழன் (தி.மு.க): 50 வருடமாகவே ஓடாத தேரை ஓடவைத்ததற்கும் வார்டு பகுதியில்வளர்ச்சி பணிகளை உடனே நிறைவேற்றி தந்தமைக்கு நன்றியையும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணையாளர் மகேஷ்வரி: ஆதிதிராவிட மக்கள் அதிகம்வசிக்கும் பகுதியில் நமக்கு நாமேதிட்டத்தின் மூலம் பணிகள் செய்ய 5-ல் ஒரு பங்குஅதாவது திட்ட மதிப்பீடு ஐந்து லட்சம் என்றால் ஒரு லட்சம் செலுத்தினால் போதும் . ராமதாஸ்(சுயே): ரயில்வே காலணியில் சாலை, தெரு விளக்குகால்வாய் அமைத்து தர வேண்டும். 

    ஜரின்னிசா (தி.மு.க) தண்டு பாளையத்தில் கழிவு நீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை எல்லாம் வழிந்து சுகாதாரகேடுஏற்படுகிறது. ஏ.கே.எஸ். மண்டபம் பின் புறம் உள்ள தெருக்களில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தெரு மின் விளக்கு அமைத்து தரவேண்டும்

    தலைவர் ராஜேந்திரன்: ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை .பண்ருட்டி நகராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 வார்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வளர்ச்சி பணிகள் செய்யப்படும். நாய்கள் பிடிக்கப்படும். சமுதாய கூடம் பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. குடி நீர், தெருவிளக்கு பிரச் சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும். ெரயில்வே காலணியில் கல்வெட்டு அமைத்து சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் . பண்ருட்டி நகராட்சியில் முதன்மை நகராட்சியாகபாடுபட்டுவருகின்றேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது.

    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சிக குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த திட்டத்தின் முதல் சிறப்பு முகாம் ராயபுரம் மண்டலத்தில் நடைபெற்றது.

    இந்த நிலையில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது. புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து மனுவாக அளித்தனர். குறிப்பாக தெருவிளக்கு, குப்பை அகற்றுதல், குடிநீர்-கழிவுநீர் தொடர்பாக ஏராளமானோர் மனு அளித்து இருந்தனர்.

    இந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மேலும் அவர் கோரிக்கை மனு வழங்கிய பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    சிறப்பு முகாமில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அவர் பேசும் பாோது, மக்களைத்தேடி மேயர் திட்டம் 15 மண்டலங்களிலும் நடந்து முடிந்தவுடன் மக்களைத்தேடி மேயர் செல்ல வேண்டும். தற்போது மண்டல அளவில் மேயர் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கிறார். வரும் காலங்களில் பகுதி வாரியாக அவர் மக்களை சந்திக்க வேண்டும். முதல் கட்டமாக குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்வாயையொட்டி வசிப்பவர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தாயகம் கவி எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 145-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் குடிநீர் வாரியம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதே நேரம் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவரும், 145-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சத்தியநாதன் முயற்சியால் ரூ.12 கோடியில் 150 தார் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க சென்னை குடிநீர் வாரியம் பைப் லைன் பணிகளை முடித்து, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கினால் தான் தார்சாலை அமைக்க முடியும்.

    ஆனால் 110 சாலைகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை பலமுறை மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் சந்தித்து விரைவாக குடிநீர் பணிகளை முடித்து பணி முடிப்பு சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தார்.

    ஆனாலும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதனை அறிந்த சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, விஜயகுமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதனுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் 45 நாட்களுக்குள் குடிநீர் பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் பாதியில் முடிக்கப்பட்டது.

    • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
    • செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. 6908 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1135 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 135 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 708 மி.கனஅடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 2251 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2354 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 460 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×