search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழவேற்காடு"

    • கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது.
    • ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு கடற்கரை பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வருகின்றன. இவை ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும்.

    கரைக்கு முட்டையிடும் ஆமைகள் படகு மற்றும் வலையில் சிக்கி இறப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்தது. மேலும் ஆமையின் முட்டைகளை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க வனத்து றையினருடன் இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினரும் களத்தில் இறங்கினர்.

    அவர்கள் பழவேற்காடு கடற்கரையோரத்தில் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்தனர்.

    கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 9,700 முட்டை சேகரிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் இந்த முட்டைகள் தற்போது குஞ்சு பொரிக்கத்தொடங்கி உள்ளன. இந்த ஆமை குஞ்சுகளை மீண்டும் கட லில் விடும் பணியில் வனத்துறையினர் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக பிறந்த 1,121 ஆமைக்குஞ்சு களை வனச்சரகர் அலுவலர் ரூஸப் லெஸ்லி தலைமையில் அதிகாரிகள் பழவேற்காடு கடலில் விட்டனர்.

    • வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.
    • 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை வழியாக அதானி துறைமுகம் மற்றும் காட்டுப் பள்ளி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் துறைமுகம் , நிலக்கரி சேமிப்பு கிடங்கு வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் திருவொற்றியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பழவேற்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சுற்று வட்டார பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.

    கடந்த வாரத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலில் இருந்து மணல் முழுவதும் பழவேற்காடு-காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் படர்ந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையே தெரியாத அளவுக்கு மணல் திட்டுக்களாக காட்சி அளிக்கிறது.

    இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.

    மணலால் மூடப்பட்ட சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல் தலைமையில் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையை மூடிய மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    இதனை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது. நாளைக்குள் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் வழக்கம்போல் வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
    • ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பொன்னேரி:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ளம்பாதித்த பகுதிகளை மத்தியகுழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவின் அதிகாரிகள் ஏ.கே. சிவ்ஹரே, விஜயகுமார், பவ்யா பாண்டே உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடன் இருந்தார். புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிவரை பழவேற்காடு பகுதியில் மத்திய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது விவசாயிகள் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகியது குறித்து பயிர்களை பிடுங்கி காண்பித்தனர். தொடர்ந்து தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு குறித்தும் ஆய்வு செய்தனர். பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாலசந்தர், பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றி வேலன் உடன் இருந்தனர்.

    • தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
    • கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.

    தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

    • கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
    • குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.

    பொன்னேரி:

    பழவேற்காட்டில் முகத்து வாரம் மணல் சேர்ந்து அடைபட்டத்தால் அப்பகுதியை சுற்று உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

    கடற்கரை அருகில் உள்ள கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால் ஏரி பகுதியில் பிடிபடும் நண்டு, இறால்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன. ஒரு கிலோ நண்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் இறால் கிலோ ரூ.500 முதல் 800 வரையும், மடவை மீன் ரூ.300 முதல் 500 வரையும் விற்பனை செய்யபடுகிறது.

    • ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
    • தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னல் பல்வேறு காரணங்களால் முகத்துவரப்பணி நிறத்தப்பட்டது.

    இந்நிலையில் முகத்துவார பகுதியில் மணல் சேர்ந்து அடைத்து உள்ளால் மீனவர்களால் படகுகளை அவ்வழியாக கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 2 வாரமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு மீன், நண்டு வரத்து முற்றிலும் குறைந்து விட்டதால் அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையே பழவே ற்காட்டில் முகத்துவாரம் அடைப்பட்டு இருப்பதை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, மீன்வளத்துறை பொன்னேரி உதவி இயக்குநர் கங்காதரன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது நான்கு இடங்களில் முகத்துவாரம் வெட்டுவதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா ன பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
    • பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    பழவேற்காடு ஏரி சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது.

    வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.

    பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது.

    இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.

    பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இந்த ஏரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் வகையில் உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும்.

    வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

    இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது.

    கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும்.

    இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிரினங்களின் தன்மையையும் உருவாக்குகிறது. ஆனால் பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    மழை இல்லாத காலங்களில் பழவேற்காடு தீவு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வடகிழக்கு பருவ மழையின் போது அதிகளவு மழை பெய்யும் என்பதால் அவர்கள் தீவில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    பழவேற்காடு தீவில் மொத்தம் 5 கிராமங்கள் உள்ளன. சாத்தான்குப்பம், எடமணி, எடமணி காலனி, ரகமத் நகர், பசியாவரம் ஆகிய 5 கிராமங்கள் கொண்ட அந்த தீவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 2 தொடக்கப் பள்ளிக்கூடங்கள் அங்கு உள்ளன.

    வழிபாட்டு தலங்கள், சாலைகள் எல்லாம் இருந்த போதிலும் அத்தியாவசிய தேவையான மருத்துவமனை அங்கு கிடையாது. இதனால் பழவேற்காடு தீவில் உள்ள 5 கிராம மக்களும் அத்தியாவசிய மருத்துவ சேவை மற்றும் பொருட்களுக்காக வெளியில்தான் வரவேண்டும்.

    பொதுவாக நவம்பர் மாதம் தீவை சுற்றி தண்ணீர் அதிகரிக்கும். அப்போது ஏரியில் இருந்து வெளியில் வருவது மிகவும் சிரமம். இதை கருத்தில் கொண்டு பழவேற்காடு ஏரியில் பிரமாண்டமான பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. சென்னை சாலையை இணைக்கும் வகையில் அந்த பாலத்தை கட்ட வரையறுக்கப்பட்டது.

    ஆனால் சுற்றுச்சூழல் காரணமாக பாலம் கட்டுவது நீண்ட நாட்களாக தடைபட்டு வந்தது. கடலோர ஒழுங்குப்படுத்தும் கழகத்தின் உத்தரவு கடந்த 2018-ம் ஆண்டு கிடைத்த பிறகு பாலம் கட்டுவதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் 2022-ம் ஆண்டுதான் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.

    சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் அங்கு பாலம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி வழங்கி உள்ளது. ஆனால் நாளடைவில் திட்ட செலவு அதிகரித்தது. 432 மீட்டர் நீளத்துக்கும் சுமார் 9 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணிகள் மிகவும் மெல்ல நடக்கின்றன. இதன் காரணமாக பழவேற்காடு ஏரி தீவு மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகிறார்கள்.

    வருகிற நாட்களில் அதிக மழை பெய்து தண்ணீர் பெருகி விட்டால் தீவு பகுதியில் உள்ள 5 கிராம மக்களும் வெளியில் வர முடியாமல் தவிக்க நேரிடும். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது 5 கிராம மக்களும் சுமார் 2 வாரங்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிட்டது.

    பாலம் கட்டும் பணி காரணமாக ஏற்கனவே மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களாக அந்த பாலம் கட்டும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

    எனவே பழவேற்காடு பகுதி தீவு மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் அந்த பாலத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் தீட்டு காரணமாக நீரோட்டம் தடைபட்டு உள்ளது மேலும் படகுகள் வந்து செல்லும் பொழுது தரை தட்டி சேதம் அடைந்து விடுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    எனவே முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து மணல் அரிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முகதுவாரம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதற்கான பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முகத்துவார பணி நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மதிவாணன் பழவேற்காடு முகத்துவார பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். அவர் படகுமூலம் சென்று பழவேற்காடு முகத்துவாரப் பகுதியை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் மதிவாணன் கூறும்போது, பழவேற்காடு முகத்துவாரம், மீன்வளம் மட்டுமின்றி 62 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் ஆகும். இதன் சீரமைப்புக்காக மீன்வளத்துறை சார்பில் ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சிக்கல் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனை தீர்க்கப்பட்டு மீனவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பழவேற்காடில் சுற்றுலா த்தலத்தை மேம்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

    • பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று மீனவ கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியை சுற்றி உள்ள 69 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், கடலும் இணையும் முகத்துவாரம் உள்ளது. இந்த முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வந்தனர். எனவே பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தப் பணிகளை 3மாதங்களில் திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் வனத்துறையினரில் உரிய அனுமதிபெறாமல் பழவேற்காடு முகத்துவார பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் முகத்துவார பணிகளை தடுத்து நிறுத்தினார். அப்போது அதிகாரிகள் கூறும்போது, வனத்துறையில் முறையாக அனுமதி பெறாமல் பணி நடைபெறுகிறது. மீறி பணிகள் நடைபெற்றால் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் முகத்துவார பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு பழவேற்காடை சுற்றி உள்ளல் 69 மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினர் இரண்டு வாரத்திற்குள் பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று மீனவ கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும்.
    • மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியா வின் மிகப்பெரிய இரண்டா வது உவர்ப்பு நீர் ஏரியாகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    இவர்கள் மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும். பருவ கால மாற்றத்தினாலும் கடல் அலையின் சீற்றத்தினாலும் அந்த இடத்தில் அடிக்கடி மணல் திட்டுக்கள் உருவாகி முகத்துவாரம் அடைபட்டு போவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். ஒவ்வொரு வருடமும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து அடைபட்ட மணல் திட்டு பகுதிகளை படகு மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் உள்ளே சென்று தூர்வாரி சென்று வந்தனர்.

    இதைத்தொடர்ந்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றி உள்ள மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவார பணிக்கு ரூ.26.85 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பழவேற்காடு முகத்துவார பணி இன்று காலை தொடங்கியது. இதனால் மீனவர்களின் 40 வருட கனவு நிறைவேறி உள்ளது. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×