search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழவேற்காடு முகத்துவாரம் பணி இன்று தொடக்கம்- ரூ.26 கோடி செலவில் நடக்கிறது
    X

    பழவேற்காடு முகத்துவாரம் பணி இன்று தொடக்கம்- ரூ.26 கோடி செலவில் நடக்கிறது

    • மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும்.
    • மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியா வின் மிகப்பெரிய இரண்டா வது உவர்ப்பு நீர் ஏரியாகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    இவர்கள் மீன் பிடிப்பதற்காக படகில் செல்லும் முகத்துவாரம் பகுதி ஏரியும்,கடலும் சந்திக்கும் இடம் ஆகும். பருவ கால மாற்றத்தினாலும் கடல் அலையின் சீற்றத்தினாலும் அந்த இடத்தில் அடிக்கடி மணல் திட்டுக்கள் உருவாகி முகத்துவாரம் அடைபட்டு போவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். ஒவ்வொரு வருடமும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து அடைபட்ட மணல் திட்டு பகுதிகளை படகு மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் உள்ளே சென்று தூர்வாரி சென்று வந்தனர்.

    இதைத்தொடர்ந்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றி உள்ள மீனவ கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பழவேற்காடு முகத்துவார பணிக்கு ரூ.26.85 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பழவேற்காடு முகத்துவார பணி இன்று காலை தொடங்கியது. இதனால் மீனவர்களின் 40 வருட கனவு நிறைவேறி உள்ளது. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×