search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new plan"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.
    • விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் ஆகியோரது ஏற்பாட்டில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள ஒரு பள்ளி முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களை விளக்கி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

    அவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாநகராட்சி கவுன்சிலர் கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆ.க.மணி, பொன்னையா பாண்டியன், பகுதி செயலாளர் கோபி என்ற நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
    • காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும்.

    காங்கயம்:

    காங்கயம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். வடிகால்கள் தூா்வாருதல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 75 தீா்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் பேசியதாவது: - காங்கயம் நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான குடிநீா் விநியோகம் வழங்க புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், பழைய குடிநீா்க் குழாய்கள் அவ்வப்போது பழுதடைந்து, பின்னா் சரி செய்யப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 18 வாா்டுகளிலும் உள்ள அனைத்து குடிநீா்க் குழாய்களையும் அகற்றிவிட்டு புதிதாக குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.31 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நகா்ப்புற சீரமைப்பு மற்றும் புத்தொளிக்கான இயக்கத்துக்கு (அம்ருத் 2.0) விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா்.

    கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ம.திலீபன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா்செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா்மகேந்திரகுமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீராணம் ஏரி மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகின்றன. ஆனால், தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

    நகருக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக 500 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

    இதில் நெமிலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு திட்டத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.

    இந்த நிலையில் சிறிய அளவிலான கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்ட மிட்டு இருக்கிறது. காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக் கேணி, எம்.ஆர்.சி. நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையையொட்டி உள்ள 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    6 மாதத்துக்குள் இந்த 5 நிலையங்களை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சிறிய அளவிலான 5 கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் தலா ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லாததால் தற்போது சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

    இதற்காக நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்ட பகுதிகளை தேர்வு செய்து இருக்கிறோம். 5 சுத்திகரிப்பு நிலையம் மூலம் 5 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும்.

    இந்த சிறிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க பெரிய அளவிலான இடங்கள் தேவை இல்லை. சிறிய இடத்திலேயே அமைத்துவிடலாம். இதற்கு அனுமதி பெறுவதும் எளிதானது.

    இந்த குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பைப்புகள் மூலம் தண்ணீரை அருகில் உள்ள குடிநீர் விநியோகிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்படுகிறது என்றார்.

    இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில சுற்றுச்சூழல் கழகம், கடலோர ஒழுங்கு முறை அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்னும் புதிய திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியை அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத நகரமாக அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றின் கவர்களை தனியாக பிரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பிளாஸ்டிக்கை கொடுங்கள் - பரிசை பெறுங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி பயன்படுத்திய 10 பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கடைகளில் வழங்குபவர்களுக்கு ஒரு பரிசு கூப்பன் வீதம் வழங்கப்படும். அதில் உள்ள பரிசுத் தொகையை பொருட் கள் வாங்கும் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இதற்காக கடைகளில் தனியாக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது தூத்துக்குடி மாநகராட்சியால் முதன் முதலாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டம் ஆகும்.

    இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி சுடலை காலனியில் நடந்தது. நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, பொதுமக்கள் இந்த பரிசுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை கொண்டு சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அற்ற மாநகராட்சியாக தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாத்திரங்களை கொண்டு வந்து உணவு வாங்கும் நபர்களுக்கு இலவசமாக சாம்பார் தூக்குவாளி வழங்கும் நிகழ்ச்சி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொடங்கி வைக்கப்பட்டது. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர சுற்றுலாத் துறை புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு நேரத்தை குறைக்க ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மூலம் புதிய திட்டத்தை அமல்படுத்த ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக ஏ.சி., டி.வி., வைபை வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு பஸ்களை ஆந்திர சுற்றுலா துறை இந்த மாத இறுதியில் இருந்து இயக்க உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து தொடங்குகிறது.

    இந்த சொகுசு பஸ்சில் 43 பேர் பயணம் செய்யலாம். இந்த பஸ் தினமும் விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருப்பதி வந்தடையும்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாற்று பஸ்சில் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு சிறிது நேரம் தங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் வசதி, குளியல் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

    பின்னர் அவர்கள் தரிசனத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்காக முன் கூட்டியே தரிசன டிக்கெட்டுகளை சுற்றுலா துறை ஏற்பாடு செய்து தயாராக வைத்திருக்கும். அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதங்களும் வழங்கப்படும்.

    பின்னர் அவர்கள் திருமலையில் இருந்து திருப்பதி அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சொகுசு பஸ் மூலம் காளகஸ்தி கோவிலுக்கு செல்வார்கள். அங்கு தரிசனம் செய்த பின்பு விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்வார்கள்.

    இது 3 நாள் சுற்றுலா ஆகும். இதற்கான கட்டணம் ரூ.4 ஆயிரம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாக விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கோதாவரி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர சுற்றுலாத் துறை இந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×