search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு நகராட்சி"

    • செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. முக்கிய ரெயில்வே சந்திப்பு, மாவட்ட அரசு தலைைம ஆஸ்பத்திரி, ஏராளமான பள்ளி-கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பழவேலி நீர் ஏற்றும் தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாததை கண்டித்தும் செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரும் 9-வார்டு கவுன்சிலருமான தமிழரசன் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகையுடன் அமர்ந்து இருந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் தமிழரசன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜே.சி.கே. நகர் முல்லை தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.6 லட்சம்
    • பச்சையம்மன் கோவில் தெரு பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்விசை பம்பு டேங்க் அமைக்க ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2011-2022-ம் நிதியாண்டில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பாரதியார் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், ஜே.சி.கே. நகர் முல்லை தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.6 லட்சம், சின்னம்மன்கோயில் தெரு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், சையத் யாகூப் தெருவிற்கு சிமெண்ட் சாலைக்கு ரூ.5 லட்சம், நத்தம், நடுத்தெரு மற்றும் கைலாசநாதர் கோயில் தெருவில் சிறு மின்விசை பம்பு மற்றும் குடிநீர் டேங்க் அமைக்க ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பச்சையம்மன் கோவில் தெரு பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்விசை பம்பு டேங்க் அமைக்க ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், சுடுகாட்டு தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம், தட்டான்மலை தெரு முகப்பில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 லட்சம், கே.கே.தெரு, 3-வது குறுக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.6 லட்சம், சுந்தர விநாயகர் கோவில் தெரு சிமெண்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.49.75 லட்சத்தை செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×