search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர் போராட்டம்"

    • செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. முக்கிய ரெயில்வே சந்திப்பு, மாவட்ட அரசு தலைைம ஆஸ்பத்திரி, ஏராளமான பள்ளி-கல்லூரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கூடுதல் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பழவேலி நீர் ஏற்றும் தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாததை கண்டித்தும் செங்கல்பட்டு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரும் 9-வார்டு கவுன்சிலருமான தமிழரசன் திடீரென நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகையுடன் அமர்ந்து இருந்தார். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து கவுன்சிலர் தமிழரசன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மெயின் ரோட்டில் இருந்து கொத்த பசவபுரத்திற்கு செல்லும் 2½ கிலோமீட்டர் தூர சாலை வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல முடியாமல் சேரும் சகதியமாக உள்ளது.
    • சாலையை சீரமைக்க கோரி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சோமேரெட்டி பள்ளி அருகே உள்ள கொத்த பசவபுரத்தை சேர்ந்தவர் தர்மிச்செட்டி ராஜேஷ். இவர் 15-வது வார்டு மண்டல கவுன்சிலராக ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    மெயின் ரோட்டில் இருந்து கொத்த பசவபுரத்திற்கு செல்லும் 2½ கிலோமீட்டர் தூர சாலை வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல முடியாமல் சேரும் சகதியமாக உள்ளது.

    இதனை சீரமைக்க கோரி நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

    இதனை கண்டித்து ஊர் பொதுமக்களுடன் தர்மி செட்டி ராஜேஷ் சாலையில் படுத்து உருண்டு அங்க பிரதட்சண போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அரசு முடக்கி வைத்து உள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

    அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நல்ல புத்தியை கொடுத்து மக்கள்நல பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக சாலையில் படுத்து அங்க பிரதட்சணம் செய்தேன் என்றார்.

    ×