search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warning"

    • உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது.

    எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ளகிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் வாயு கசிந்தஉடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம்.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவுக்காக இடம் பெயர்ந்து குன்னூர் மலைப்பாதை, கொல க்கம்பை மற்றும் தூதர்ம ட்டம் பகுதியிலும் முகாமிட்டு வருகிறது.

    குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் கூடிய 10 யானைகள் மலைப்பாதை மற்றும் மலை ரெயில் பாதைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். இந்த யானை கூட்டத்தை விரட்ட குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை கூட்டத்தை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் 2 குட்டி களுடன் மேலும் 5 யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போகும் நிலை உருவாகியுள்ளது. தூதர்மட்டம் பகுதியில் அந்த யானை கூட்டம் அங்குள்ள மேரக்காய், பீன்ஸ், கேரட் பயிரிடப்பட்ட விளைநிலங்களை சேதப்படுத்தியதுடன் அருகே உள்ள காய்கறி சேமிப்பு குடோன்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை களை முற்றிலுமாக சூறை யாடியது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு ள்ளதால் வனத்துறையினர் தகரங்களைக் கொண்டு சத்தம் எழுப்பி விரட்டி அடிக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறுகையில் யானைகள் நடமாட்டம் குறித்து வன குழுவினர் ஆங்காங்கே இரவும், பகலுமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறியதை வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

    • மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
    • மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் அதளை ஒட்டிய இலங்கை கடற்பகுதி, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலாமீட்டர் வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது, எனவே மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் மாவட்டத்தில் பெரிய தாழை முதல் வேம்பார் வரை மீன்பிடிக்க மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • 5 மாவட்டங்களில் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகையாற்றில் இருந்து 15 நாட்களுக்கு மொத்தம் 2466 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மீண்டும் டிசம்பர் 11-ந்தேதிசிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 2-க்கு வைகையாற்றில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வருகிற 4-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மொத்தம் 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனையடுத்து டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி 3-க்கு 1304 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். டிசம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 1-க்கு மொத்தம் 229 மி.கனஅடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையிலிருந்து வைகையாற்றில் நேற்றுமுதல் வருகிற 13-ந்தேதி வரை விநாடிக்கு 2000 கனஅடியும், 14-ந்தேதி விநாடிக்கு 1180 கனஅடிவீதமும் தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு வருகிற 16-ந்தேதி விநாடிக்கு 3000 கனஅடியும், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விநாடிக்கு 2300 கனஅடிவீதமும், டிசம்பர் 20-ந்தேதி விநாடிக்கு 1120 கனஅடிவீதமும், தண்ணீர் திறக்கப்படும்.

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக 22-ந்தேதி விநாடிக்கு 600 கனஅடியும், 23-ந்தேதி விநாடிக்கு 565 கனஅடியும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விநாடிக்கு 500 கனஅடியும், 26-ந்தேதி விநாடிக்கு 400 கனஅடிவீதமும் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 136.15 அடியாக உள்ளது. வரத்து 1248 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, இருப்பு 6156 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின்நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் மழையளவு குறைந்தபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 40-வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

    • மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.

    இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.

    • அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
    • அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று பலவந்தமாக மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    அதே போல தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்கிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    ஒரு சில நேரங்களில் கனமழையும் கொட்டியது. நேற்றிரவு ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சிறிது நேரமே அந்த மழை நீடித்தது. ஆனால் நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. காற்று, இடி-மின்னல் எதுவும் இல்லாமல் வெளுத்து வாங்கியது.

    சென்னையை ஒட்டிய மாவட்டங்களிலும் ஆர்ப்பரிப்பு இல்லாமல் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆனால் பெரும்பாலான இடங்களில் உடனே வடிந்துவிட்டது.

    இந்நிலையில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். நாளை (22-ந் தேதி) மற்றும் 23-ந் தேதியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று முதல் 24-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை இயல்பைவிட கடந்த வாரம் வரை 13 சதவீதம் குறைவாக பதிவாகி இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பற்றாக்குறை குறைந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 6செ.மீ., எண்ணூர் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
    • மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ந் தேதி தமிழக அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ந் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டு மறுநாளே கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

    இந்த சட்டத்தின்படி இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணைய வழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    • தீபாவளியை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது.
    • ரெயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே எஸ்.பி தெரிவித்தார்.

    சென்னை:

    தீபாவளியை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது, மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே எஸ்.பி சுகுணா சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாக பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரெயில் நிலையங்களுக்கு கொண்டு செல்வதையோ, ரெயில் பெட்டிகளில் கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும். அதனை மீறும் பட்சத்தில் ஆர்.பி.எப் மூலமாக அபராதம் விதிக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ரெயில்களில் பயணம் செய்யும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வகையான ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் கிரைம் போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களில் 25-க்கும் மேற்பட்ட செல்போன்கள் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி உயரமுள்ள இந்த அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். உபரி நீரினை விவசாயத்திற்கு திறக்கப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த அணையில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று மாலை கோமுகி அணைக்கு 3 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதையடுத்து நேற்று இரவு கோமுகி அணையில் இருந்து 2500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும், நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால், நீர் திறந்து விடப்படுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கோமுகி அணைக்கு 800 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44 அடிக்கு நீர் உள்ளதால், உபரியாக வரும் 800 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. இதனால் கோமுகி அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர்.
    • இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் தனியார் பிரியாணி கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென்று கடைக்குள் சென்று அன்பளிப்பாக பணம் கேட்டனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அன்பளிப்பு பணம் தர மறுத்தனர். ஆத்திரமடைந்த திருநங்கைகள் கடை நிர்வாகத்தை கண்டித்து கூச்சலிட்டனர். இதையடுத்து கடை உரிமையாளர் வெளியில் வந்து தேவையற்ற முறையில் கூச்சலிட வேண்டாமென திருநங்கைகளிடம் கூறினார்.இருந்தபோதிலும் திருநங்கைகள் கடைக்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர் தகவலறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    ஏன் கடை முன்பு நிற்கிறீர்கள்? அனைவரும் கலைந்து செல்லுங்கள் திருநங்கைகளிடம் போலீசார் கூறினர். அப்போது திடீரென்று திருநங்கைகள் புதிதாக கடை திறந்து உள்ளதால் எங்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கினால் ஆசீர்வாதம் செய்வோம். இதற்காக நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் தற்போது யாரும் நிற்க வேண்டாம். முதலில் கலைந்து சொல்லுங்கள் என தெரிவித்தனர். திடீரென்று திருநங்கைகள் போலீசாரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கடும் எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக திருநங்கைகள் கூச்சலிட்டபடியே அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன.
    • ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு அறிவுறுத்தலின் பேரில் கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக தனியார் பஸ்கள் வந்து கொண்டிருந்தன. அதனை நிறுத்தி போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய போது, கடலூர் புதுநகர் பகுதியில் 7 தனியார் பஸ்கள் , ரெட்டிச்சாவடி பகுதியில் 8 தனியார் பஸ்கள் உரிமம் இல்லாமல் இயங்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் உரிமம் இல்லாத பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரூ 1.50 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய பஸ்கள் உரமம் மற்றும் உரிய ஆவணத்துடன் சென்று வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×