என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குட்டிகளுடன் சுற்றித்திரியும் 15 காட்டு யானைகள்- சுற்றுலாபயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
- யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம்.
அருவங்காடு:
குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவுக்காக இடம் பெயர்ந்து குன்னூர் மலைப்பாதை, கொல க்கம்பை மற்றும் தூதர்ம ட்டம் பகுதியிலும் முகாமிட்டு வருகிறது.
குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் கூடிய 10 யானைகள் மலைப்பாதை மற்றும் மலை ரெயில் பாதைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். இந்த யானை கூட்டத்தை விரட்ட குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை கூட்டத்தை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் 2 குட்டி களுடன் மேலும் 5 யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போகும் நிலை உருவாகியுள்ளது. தூதர்மட்டம் பகுதியில் அந்த யானை கூட்டம் அங்குள்ள மேரக்காய், பீன்ஸ், கேரட் பயிரிடப்பட்ட விளைநிலங்களை சேதப்படுத்தியதுடன் அருகே உள்ள காய்கறி சேமிப்பு குடோன்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை களை முற்றிலுமாக சூறை யாடியது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
இந்த யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு ள்ளதால் வனத்துறையினர் தகரங்களைக் கொண்டு சத்தம் எழுப்பி விரட்டி அடிக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறுகையில் யானைகள் நடமாட்டம் குறித்து வன குழுவினர் ஆங்காங்கே இரவும், பகலுமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறியதை வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்