என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Virender Sehwag"
- ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகினால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும்.
- மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில், ' 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவரை கொண்டு வர அணி நிர்வாகம் மனதில் நினைத்தால் 35 வயதான ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அப்படி செய்தால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும்.
அத்துடன் 20 ஓவர் போட்டிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டால், ரோகித் சர்மா நல்ல ஓய்வு எடுத்து கொண்டு புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த உதவிகரமாக இருக்கும். மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை இந்திய அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங்கில் முதல் 3 வரிசையில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், லோகேஷ் ராகுல் ஆடினால் நன்றாக இருக்கும். இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக் பந்து வீச்சு தான் என்னை அதிகம் கவர்ந்ததாகும். அவரது திறமைக்கு மூன்று வடிவிலான இந்திய அணியிலும் நீண்ட காலம் இடம் பெறுவார்' என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி பணியாற்றி வந்தார்.
கேப்டன் பொறுப்பு சுமையால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக அவர் கருதினார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் அவர் விலகி உள்ளார்.
தற்போது முடிந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பார்.
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால் விராட் கோலியின் கேப்டன் பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.
விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.
ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின் 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.
இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே டோனிக்கு புகழாரம் சூட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். இதன் காரணமாகவே நான் டோனி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டேன். டோனியின் பேச்சும், செயல்பாடும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்களை களம் இறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக்கை பா.ஜ.க. சார்பில் போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக பா.ஜ.க. பிரதிநிதிகள் அவரை சந்தித்துப் பேசினார்கள்.
“மேற்கு டெல்லி தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம்” என்று ஷேவாக்கிடம் பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மேற்கு டெல்லி தொகுதியில் தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக பர்வேஷ்வர்மா உள்ளார். ஷேவாக் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அந்த தொகுதியை விட்டுத்தர தயார் என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்க கிரிக்கெட் வீரர் ஷேவாக் மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ எனக்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை” என்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் ஷேவாக்கை தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி நடந்தது. அப்போதும் ஷேவாக் போட்டியிட மறுத்துவிட்டார். மீண்டும் அவர் பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை போட்டியிட வைக்க முயற்சி நடந்து வருகிறது. கவுதம் காம்பீர் கடந்த டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.
அப்போது கிரிக்கெட் உலகுக்கு அவர் செய்த சேவைகளை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் ஆதரவாளராக காம்பீர் மாறினார்.
அவர் தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடக்கும் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் காம்பீர் பங்கேற்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ஏப்ரல் முதல் வாரம் வெளியிட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். #BJP #VirenderSehwag
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலியின் பவுண்டேசன் மற்றும் ஆர்.பி.-சஞ்ஜிவ் கோயங்கோ குரூப் சார்பில் டெல்லியில் நேற்று விளையாட்டு விருது வழங்கும் விழா நடப்பதாக இருந்தது. ஆனால் ராணுவ வீரர்களை இழந்து வாடும் இந்த வேதனையான தருணத்தில் இந்த விழாவை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அந்த விழாவை வேறுஒரு நாளுக்கு தள்ளிவைப்பதாக விராட் கோலி டுவிட்டரில் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை இழுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜனதா சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. இதை அவர் மறுத்துள்ளார்.
இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு வந்த வதந்திதான். இப்போது வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை.
இவ்வாறு ஷேவாக் கூறினார். #VirenderSehwag
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 129 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 157 ரன்கள் குவித்தார். 81 ரன்கள் அடித்திருக்கும்போது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையை இருந்தது. சச்சின் சாதனையை கடந்த விராட் கோலிக்கு பிரபல முன்னாள் வீரர்கள் டுவிட்டர் மூலம் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன.
சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கண்மூடித்தனமான மற்றும் நிலையான உங்களது ஆட்டத்தை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். ரன் வேட்டை தொடரட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
The intensity and consistency with which you bat is just amazing. @imVkohli, congratulations on achieving 10,000 runs in ODIs. Keep the runs flowing. pic.twitter.com/tQUhY8bHna
— Sachin Tendulkar (@sachin_rt) October 24, 2018
சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சாப்ட்வேர் எந்த நேரத்திலும் அப்டேட் ஆகும். நிலையான ஆட்டத்திற்கு அர்த்தம் என்ன என்பதை விராட் கோலி மறுவரையறை செய்துள்ளார். 9 ஆயிரம் ரன்னில் இருந்து 10 ஆயிரம் ரன்னைத் தொடுவதற்கு 11 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துள்ளார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Software update all the time. Virat Kohli has redefined what consistency means. Got his 9000th odi run just 11 innings ago and got his 10000 th today, to go with his 37th century. Enjoy the phenomena #KingKohlipic.twitter.com/OPhvIsBRDJ
— Virender Sehwag (@virendersehwag) October 24, 2018
Congratulations #KingKohli on becoming the fastest to 10000 ODI runs. What a player ! pic.twitter.com/fUkMgldTEx
— Mohammad Kaif (@MohammadKaif) October 24, 2018
And the insanity continues with an undying intensity. Congratulations #KingKohli on 10,000 ODI runs and 37th century. The hunger, consistency and intensity is simply incredible pic.twitter.com/DGoP1GlZ01
— VVS Laxman (@VVSLaxman281) October 24, 2018
What a champion @imVkohli proud of you my boy ⭐️⭐️⭐️⭐️⭐️🏏 @BCCI#INDvsWI#KINGKOHLIpic.twitter.com/svXWOJi9op
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 24, 2018
“Century pe century baar baar, run hue pure dus hazaar!”
— Suresh Raina (@ImRaina) October 24, 2018
Heartiest congratulations brother @imVkohli 👏
Fastest player ever to complete 10,000 ODI runs! What a remarkable journey it’s been so far!#ViratKohli#Virat10Kpic.twitter.com/HRzLEGaxzN
Another absolute masterclass from the India captain! @imvKohli passed 10,000 ODI runs in style with an exceptional 157* to propel his side to 321/6 against Windies in Vizag.
— ICC (@ICC) October 24, 2018
The G.O.A.T? 🐐#INDvWI LIVE ➡️ https://t.co/gVFbHbvkYhpic.twitter.com/euFlVN8Yo7
அவரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியும் இணைதள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினர். அப்போது சேவாக்கிடம், கிரிக்கெட்டில் உங்களை அச்சுறுத்திய பவுலர் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேவாக், ‘நான் பயந்த ஒரே பவுலர் யார் என்றால் அது பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்தான். அவர் எந்த பந்தில் காலை பதம் பார்ப்பார், எந்த பந்தில் தலையை குறிவைப்பார் என்பது தெரியாது. அவர் வீசிய நிறைய பவுன்சர்கள் எனது ஹெல்மெட்டை தாக்கியுள்ளன. அவரை கண்டு நான் பயந்தேன். அதே சமயம் அவரது பந்துகளை அடித்தும் மகிழ்ந்துள்ளேன்’ என்றார்.
இந்த கேள்வியை அப்ரிடியிடம் முன்வைத்த போது, ‘‘நான் எந்த பந்து வீச்சாளரையும் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் ஒரே ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது மட்டும் கடினமாக இருக்கும். அந்த பேட்ஸ்மேன் சேவாக்தான்’’ என்றார்.
பிடித்தமான எதிரணி என்று கேள்விக்கு பதில் அளித்த சேவாக், ‘‘என்னை கவர்ந்த எதிரணி எப்போதும் பாகிஸ்தான்தான். 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். அந்த ஆட்டத்தில் என்னை பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக திட்டி தீர்த்தனர். இத்தனைக்கும் 2 பந்து மட்டுமே நின்றேன். அக்தரின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தேன். எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை அவர்களை போல் யாரும் வசைபாடியதில்லை’’ என்றார்.
மறக்க முடியாத தருணம் எது என்று சேவாக்கிடம் கேட்டபோது, ‘2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் வென்றதை சொல்வேன். தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணியாக பங்கேற்றோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சாதித்து காட்டினோம். இதேபோல் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி சொந்த மண்ணில் நடந்தது. சொந்த மண்ணில் இதற்கு முன்பு யாரும் உலககோப்பையை வென்றதில்லை என்ற நிலைமையை மாற்றி காட்டியது மறக்க முடியாது’ என்றார்.
அப்ரிடி கூறுகையில், ‘‘2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றி மறக்க முடியாத நினைவாகும். ஏனெனில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக எங்கள் நாட்டில் கிரிக்கெட் தள்ளாடிக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வெற்றி எங்கள் நாட்டில் மீண்டும் கிரிக்கெட் எழுச்சி பெறுவதற்கு முக்கியமானதாக இருந்தது’’ என்றார்.
டெல்லி கிரிக்கெட்டில் முன்னேற்றம் கொண்டு வர முக்கியமான ஆலோசனைகள் வழங்குவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மனோஜ் பிரபாகரை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சேவாக் உள்பட மூன்று பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதியே ராஜினா செய்துள்ளதாக சேவாக் தெரிவித்துள்ளார்.
‘‘டெல்லி கிரிக்கெட் வளர்ச்சி பெற ஆலோசனைகைள் வழங்குவதே கிரிக்கெட் கமிட்டியில் உள்ள எங்களுடைய பணி. ஆனால், நாளுக்கு நாள் எங்களுக்கு மற்ற வேலைகள் அதிக அளவில் வருவதால் இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாங்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தோம்’’ என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.
இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.
இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்த நாள் இன்று... இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர்.
ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கற்றுக்கொடுத்த அவருக்கு பல்வேறு பிரபலங்களும் முன்னாள் இன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும்இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
படி 1: எழுந்திரு, கண்களை இருமுறை சிமிட்டி களத்தில் இறங்கி ஆடு.
படி 2: பந்துவீச்சாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அடித்து நொறுக்கிடு. (வன்முறையை குறிப்பிடவில்லை)
படி 3: உன் பேட் மட்டும் சுழலவில்லை உத்வேகத்தோட்டு நீ பந்து வீசும் போது உன் தலைமுடியும் சுழலும்.
படி 4: யாருமே பார்க்கவில்லை என்பது போல் வெற்றியை கொண்டாடு.
இவ்வாறு சேவாக் பதிவிட்டுள்ளார். #HappyBirthdayDada
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்